Advertisment

Baakiyalakshmi Serial: வீட்ல புருஷந்தான் அப்படினா, சமைக்கப் போன இடத்தில பாக்யாவுக்கு இப்படி ஒரு வில்லியா?

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடைப் பார்க்கிற யாரும் பாக்யாவுக்கு வீட்லதான் புருஷன் அப்படி இருக்கான்னா, சமைக்கப்போன இடத்தில் இப்படி ஒரு வில்லி வந்திருக்காளே என்று உச் கொட்ட வைக்கிறது.

author-image
WebDesk
New Update
baakiyalakshmi serial, baakiyalakshmi serial today episode, Bakya go to school for cooking order in school, பாக்கியலட்சுமி சீரியல், பாக்கியலட்சு சீரியல் இன்று, பாக்யா, கோபி, செல்வி, ஜெனிஃபர், சாந்தி , Selvi, Jeniffer, Shanthi, baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸியம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று எழில் காத்திருந்த அமிர்தாவை சந்திக்கிறான். அப்போது, எழில் அமிர்தாவுக்கு சாக்லேட் தருகிறான். அமிர்தா தனது வீட்டில் எழில் தனது ஃபிரெண்ட் என்று உறுதியாக சொல்லிவிட்டதாகக் கூறுகிறாள். அவளை பாராட்டும் எழில், “வாழ்க்கையில எவ்வளவு பெரிய லாஸ் வந்த பிறகும், முடங்கிப் போகாம சிரிப்போட ரசிச்சு வாழறிங்க நீங்க கிரேட் அமிர்தா” என்று கூறுகிறான்.

அமிர்தாவிடம் தொடர்ந்து பேசும் எழில், “உங்களுக்கு சினிமாவில் இண்ட்ரஸ்ட்னு தெரியும், கதையில எல்லாம் நல்லா ஒப்பினியன் சொல்றீங்க… அதனால், நீங்க எங்கூட வொர்க் பண்ணுங்க” என்று கேட்கிறான். அதற்கு, அமிர்தா அது எப்படி முடியும் என்று கேட்கிறாள். நீங்க ஃபுல் டைம் வொர்க் பண்ண வேணாம், காலேஜ் டைம் போக, இந்த ஜூஸ் கடை, மசாலானு வொர்க் பண்றீங்க இல்ல. அந்த டைம்ல வொர்க் பண்ணலாம்… புரடியூசர்கிட்ட சொல்லி சம்பளம் வாங்கித் தருவதாகக் என்று கூறுகிறான். ஆனால், அமிர்தா தனக்கு சினிமா தெரியாது என்று கூறுகிறான். எனக்கும் வரும்போது சினிமா தெரியாது இப்போ சினிமா எடுக்கிறேன் இல்லை. அதெல்லாம், பண்ணலாம்ங்க என்று கூறுகிறான்.

publive-image

ஆனால், அமிர்தா வீட்ல என்ன சொல்லுவாங்கனு தெரியல யோசிச்சு சொல்றேன் என்று கூறுகிறாள். இதற்கு எழில் யோசிச்சு சொல்லுங்க, ஆனால், சரினு சொல்லுங்க என்று கூறுகிறான். பிறகு, அமிர்தா வீட்டுக்கு போவதாகக் கூறி கிளம்பிச் செல்கிறாள்.

அடுத்த காட்சியில், பாக்யாவின் வீடு, அங்கே இனியா பள்ளிக்கூடம் கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அப்போது கோபி, இனியாவை பள்ளிக்கூடத்துக்கு காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறுகிறான். அப்போது இனியா, அம்மாவும் வருகிறார். அவருக்கு பள்ளியில் இன்னைக்கு சமையல் ஆர்டர் என்று சொல்கிறாள். அந்த நேரத்தில், பாக்யாவும் கிளம்பி வந்து நிற்கிறாள் அவளுடன் வேலைக்காரி செல்வியும் வந்து நிற்கிறாள். அவர்களுடன் ஜெனிஃபரும் கிளம்பி நிற்கிறாள் என்பதைக் கூறுகிறார்கள். இதைப் பார்த்த, கோபி, இனியாவை மட்டும் ஸ்கூல்ல விடுறேன் நீங்க எல்லாம். ஆட்டோவுல போங்க என்று சொல்கிறான். இதைக் கேட்ட தாத்தா, அவங்களும் ஸ்கூல்தானே போறாங்க அவங்களை அங்கே விடலாம் இல்லையா என்று கேட்கிறார். ஆனால், கோபி, வண்டியில் இடம் இல்லை என்று கூறிவிட்டு ஆஃபீஸ்க்கு புறப்பட்டு செல்கிறான். பாக்யா கோபி தனக்கு ஒரு ஆல் திபெஸ்ட் சொல்ல என்று வருத்தப்படுகிறாள்.

publive-image

ஜெனிஃபர் பாக்யாவுடன் செல்ல கிளம்பி வருகிறாள். அப்போது, செழியன், அம்மா சமைக்கப் போகிறார்கள். நீ ஏன் போற எனக்கு புடிக்கல, உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன சொல்வாங்க தெரியுமா என்று கூறுகிறான். ஆனால், ஜெனிஃபர் நான் போகிறேன் என்று சொல்கிறாள். பாட்டி இடையில் புகுந்து என்ன கணவனை எதிர்த்து பேசுகிற என்று கேட்கிறார். அப்போது தாத்தா, அவங்க 2 பேரும் பேசுறாங்க நீ ஏன் இடையில பேசுற என்று கேட்க பாட்டி நீங்க வாய மூடுங்க என்று சொல்கிறார். உடனே தாத்தா பாத்தயாமா, உங்க பாட்டி எனக்கு மரியாதை கொடுக்கிறத என்று கவுண்ட்டர் அடிக்கிறார். பாக்யாவும் வேண்டாம் என்று சொல்கிறாள். ஆனால், ஜெனிஃபர் நான் போகிறேன் என்று கூறுகிறாள். தாத்தா,

செழியன் சம்மதிக்காவிட்டாலும், ஜெனிஃபர் பாக்யாவுடன் சமைக்கப் போகிறேன் என்று கூறி புறப்பட்டு செல்கிறாள். தாத்தா செழியனிடம் அவர்களை காரில் கூட்டிச்சென்று விடச் சொல்கிறார். செழியனும் அவர்களை காரில் அழைத்துச் சென்று விடுகிறான்.

பாக்யாவை பிரின்ஸிபாலை பார்க்க சொல்லிவிட்டு இனியா, கிளாஸ் ரூம்க்கு செல்கிறாள். பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் பிரின்ஸ்பாலை பார்க்க செல்வதற்கு முன்பு அவரே அங்கே வருகிறார். பிறகு, சாந்தி என்பவரை அழைத்து இந்த 3 பேரும்தான் சமைக்க வந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார். ஆனால், சாந்தி முகத்தில் ஒரு அதிருப்தி வெளிப்படையாக தெரிகிறது. பாக்யா, ஜெனிஃபர், செல்வியை பிரின்ஸிபாலுக்கு அறிமுகப்படுத்துகிறாள். நீங்க 3 பேர் மட்டும் செய்து முடிச்சுடுவீங்களா என்று கேட்க அதெல்லாம் செய்துவிடுவோம் என்று உறுதி கூறுகிறாள்.

200 பேருக்கு சமைக்கனும் 10 பேருக்கு எக்ஸ்ட்ரா சேர்த்துக்கோங்க ஈவ்னிங் 5 மணிக்கு சாப்பாடு, நிறைய டிஷ் வேணும் என்று கூறுகிறார். மேலும் சாந்தியிடம், பொருட்களையெல்லாம் எடுத்து கொடுத்து பாக்யாவுக்கு உதவி செய்யச் சொல்லிவிட்டுச் செல்கிறார். அவர் போன பிறகு, எந்த பக்கம் போகனும் என்று பாக்யா சாந்தியிடம் கேட்க, அதறு சாந்தி பதில் சொன்ன முறையே பாக்யாவை யோசிக்க வைத்துவிட்டது. சாந்தி முன்ன போங்க நன் வர்றேன் என்று கூறுகிறாள்.

பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் போன பிறகு, சாந்தி செல்கிறாள், அப்போது, பள்ளியில் வேலை செயும் ஒரு பெண் வந்து, சாந்தி அக்கா, இந்த முறை உங்களுக்கு சமையல் ஆர்டர் இல்லையா என்று கேட்கிறாள். அதற்கு போன முறை நான் சமையல் செய்தபோது சொதப்பிட்டேன். அதற்கு எனக்கு தராம ஸ்டூடண்ட் அம்மாவுக்கு கொடுத்திருக்காங்க… அதுவுமில்லாம, பிரின்ஸிபால் சமைக்கிறவங்களுக்கு என்னை உதவ சொல்லி இருக்காங்க… அவங்களுக்கு உதவ எனக்கு என்ன தலையெழுத்தா?” என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண், அப்போ இனிமேல் உங்களுக்கு சமையல் ஆர்டர் இல்லையா என்று கேட்க, தெரியல, ஆனால், அவங்க நல்ல சமைச்சாதான திருமப அவங்களுக்கு சமையல் ஆர்டர் தருவாங்க… அவங்களை நான் சமைக்க விட்டுவேனா, அவங்க எப்படி சமைக்கிறாங்கனு நான் பார்க்கிறேன். என்ன பண்றன் பாரு… இனிமேல் அந்த அம்மாவையே சமைக்க கூப்பிட்டாலும் அவங்க வரமாட்டன்னு சொல்லனும், எவளோ காசு பாத்துட்டு போவா, நான் சும்மா உக்காந்திருக்கனும், சாந்திக்கு வேற வேலை இல்ல பாரு” என்று கோபமாக கூறிவிட்டு செல்கிறாள்.

சாந்திக்கு முன்னாடி சென்றா பாக்யா, ஜெனிஃபர், செல்வி 3 பேரும் பள்ளியில் நடக்கும் பங்ஷன் பற்றி பேசுகிறார்கள். பள்ளியில் யாருக்கோ ரிட்டையர்மெண்ட் ஃபங்ஷன், ஈவ்னிங் 5 மணிக்குதான் சமைக்கனும், சீக்கிரம் வந்தா நிதானமாக சமைக்கலாம், நிறைய ஐட்டம் செய்யலாம் என்று பாக்யா ஜெனிஃபரிடமும் செல்வியிடமும் கூறுகிறாள்.

அப்போது, செல்வி பாக்யாவிடம் ஸ்கூல்ல சம்பளம் எல்லாம் கொடுத்துடுவாங்களா, இல்ல இங்க இனியா படிக்கிறான்னு ஃபிரீயா செய்யச் சொல்லுவாங்களா என்று கேட்கிறாள். அதற்கு பாக்யா அதைப் பற்றி எல்லாம் பேசலை. ஆனா பிரின்சிபால் நல்லவங்க. அதெல்லாம் கொடுத்துடுவாங்க என பாக்யா சொல்கிறாள்.

அங்கே 3 பேரும் ரொம்ப நேரமாக உட்கார்ந்திருக்கிறார்கள். ஏன் அந்த அம்மா இன்னும் வரல என்று பேசிக்கொண்டிருகிறார்கள். அப்போது செல்வி, “அக்கா அந்த அம்மாவ பார்த்தாலே சரியில்ல.. ஒருமுறை பார்த்தாலே எனக்கு யாரு நல்லவங்க கெட்டவங்கனு கண்டு பிடிக்கத் தெரியும்... அந்தம்மாவ பார்த்தா வில்லி மாதிரி இருக்கு” என்று செல்வி சொல்கிறாள். இதைக் கேட்டு ஜெனிஃபர் சிரிக்கிறாள். அதற்கு பாக்யா, “அவுங்கதான் இதுக்கு முன்னாடி இங்க சமைச்சு இருக்கனும்னு நினைக்கிறேன். அவுங்க வர்றதுக்கு முன்னாடி என்னெல்லாம் பண்ணலாம்ன்னு நம்ம ஒரு லிஸ்ட் எழுதிடுவோம்” என லிஸ்ட் எழுதுகிறார்கள்.

அப்போது, செல்வி சமையல்ல நான்வெஜ்லாம் எதுவும் இல்லையா என கேட்கிறாள். அதற்கு பாக்யா, “அதை கேட்க மறந்துட்டேனே” என்று சொல்கிறாள். அப்போது அங்கே வரும் சாந்தியிடம் அதைப் பற்றி கேட்கும்போது, “என்கிட்ட எதுக்கு கேட்குற. அதெல்லாம் அங்க கேட்டிருக்க வேண்டியதுதான” என கோபமாக சொல்கிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடைப் பார்க்கிற யாரும் பாக்யாவுக்கு வீட்லதான் புருஷன் அப்படி இருக்கான்னா, சமைக்கப்போன இடத்தில் இப்படி ஒரு வில்லி வந்திருக்காளே என்று உச் கொட்ட வைக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Baakiyalakshmi Serial Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment