/indian-express-tamil/media/media_files/2025/09/10/screenshot-2025-09-10-193949-2025-09-10-19-40-11.jpg)
கே பி வை பாலா தற்போது தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல, சமூக சேவையிலும் தன்னை முத்திரைப்படுத்திய ஒரு பன்முக திறமையாளராக இருக்கிறார். 'கலக்கப்போவது யாரு' மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர், சமீபத்தில் தனது 'காந்தி கண்ணாடி' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தை இயக்கியவர் ஷெரீஃப் ஆவார், இதில் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமூகப் பணிகளிலும் பாலா முக்கிய பங்களிப்பு செலுத்தி வருகிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வழங்குதல், அனகபுத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை தொடங்குதல் போன்ற பல சேவைகள் மூலம் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். மேலும் நடிகர் அபினயின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை அளித்துள்ளதும் அவரது மனமுள்ள செயலைக் காட்டுகிறது.
இவரது நாயகனாக நடிக்கும் முன்பும், நடக்கும்போதும் தனது பணிவும், நேர்மையும் இடையாறாது. நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார். அவர் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிரும் போது, சாதாரண மக்களுக்கும் தொடர்பு ஏற்படும் வகையில் படங்கள் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு, திரைத்துறையில் வளர்ச்சியோடு சமூகத்துக்கும் பங்களிக்கிற ஒரு அரிய நகைச்சுவை நடிகர் பாலா என்றே சொல்லலாம்.
இவர் லேட்டஸ்ட்டாக நடித்து வெளியான 'காந்தி கண்ணாடி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பாலாவுடன் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், மற்றும் அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஒரு மெசேஜ் கமெர்ஷியல் திரைப்படம் என்பதால், சமூக விழிப்புணர்வையும், நல்லநோக்கையும் கொண்டதாக பார்க்கப்படுகிறது. ‘காந்தி கண்ணாடி’ என்பது நகைச்சுவை நடிகராக மட்டும் பார்க்கப்பட்ட பாலாவின் திறமையை, உணர்வுப்பூர்வமான கதையகத்தில் ஒரு நடிகராகவும் வெற்றிகரமாக நிலைநிறுத்தும் ஒரு முக்கிய படைப்பு எனலாம்.
தற்போது ஒரு துணி கடையில் இன்டெர்வியூவில் பாலா தொகுப்பாளினி ஏஞ்செலின் உடன் 'வாராயோ வாராயோ....' என்ற பாடலுக்கு ஜோடி சேர்ந்து ஆடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஏஞ்செலின் அவர்கள் ஒரு துணியை செலக்ட் செய்ய, பாலா அதற்க்கு 'நீங்கள் கொடுத்தால் கந்தல் துணியை கசக்கி காட்டுவேன்' என்று கூறி நடனமாடியுள்ளார். இது ஒரு பழைய வீடியோ என்றாலும் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர். ரசிகர்கள் பாலாவிற்கு ரொமான்டிக் காட்சிகள் ஏற்றாவாறு தான் உள்ளது என்று ரசித்து, பாராட்டி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.