Vijay TV Serial: லட்சுமி பர்த்டே; கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் பாரதி?

vijaytv seiral news: பர்த்டே அன்னைக்கு உன் அம்மாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு என லட்சுமியிடம் சொல்கிறான் பாரதி.

vijaytv seiral news: பர்த்டே அன்னைக்கு உன் அம்மாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு என லட்சுமியிடம் சொல்கிறான் பாரதி.

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: லட்சுமி பர்த்டே; கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் பாரதி?

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று நடைபெற்ற சம்பவங்களை காணலாம்.

Advertisment

லட்சுமி, ஹேமா இருவரையும் கடைக்கு அழைத்து வருகிறார் பாரதி. அப்போது லட்சுமி இவ்வளவு பெரிய கடையை தான் பார்த்ததே இல்லை என கூறுகிறாள் லட்சுமி. பிறகு பாரதியின் கையை இரண்டு குழந்தைகளும் பிடித்து கொள்ள உங்களுக்கு பிடித்த ஆடையை நீங்களே தேர்ந்தெடுங்கள் என கூறுகிறார் பாரதி. ஒருவர் மற்றொருவருக்காக ட்ரஸ் செலக்ட் செய்கின்றனர். பிறகு எடுத்த ட்ரஸை டிரையல் ரூமில் போட்டு பார்த்து வந்து பாரதியிடம் காட்டுகின்றனர். டிரெஸ் இருவருக்கும் சூப்பர் என பாரதி சொல்ல இருவருக்கும் ரொம்ப சந்தோஷம்.

இதற்கிடையில் வீட்டில் இருக்கும் கண்ணம்மா, லட்சுமி பாரதியிடம் பழகுவதை பற்றி யோசித்து கொண்டிருக்கிறாள். யாரோட நிழல் கூட படக்கூடாதுனு நினைச்சனோ அவர் கூடவே லட்சுமி இவ்வளவு நெருக்கமா பழகுறா. எப்பவும் அவர பத்தியே பேசுறா.இதெல்லாம் ஏன் நடக்குது எப்படி நடக்குது.. ஒருவேளை அத்தை சொல்ற மாதிரி ரத்த பந்தமா?

எதிர்காலத்துல இதுதான் மகளை அப்போவோட சேர்த்து வைக்க போகுதோ என நினைத்து யோசித்துக்கொண்டிருக்காள் கண்ணம்மா. எங்க போய் முடிய போகுதுன்னு தெரியல என்றபடி இருக்கிறாள். அப்போது அங்கு வரும் கஸ்தூரி லட்சுமி எங்கே என கேட்க அவ டிரெஸ் எடுக்க போயிருக்கானு சொல்றாள் கண்ணம்மா. நீ இங்க இருக்கும் போது யார் கூட போயிருக்கா என கஸ்தூரி கேட்க டாக்டர் பாரதியோடு என சொல்கிறாள். அதனை கேட்டு சந்தோஷப்படுகிறாள் கஸ்தூரி.

Advertisment
Advertisements

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி டிரெஸ் எடுக்க கூப்பிடுறாருன்னு சொன்னா வேணாம்னு சொல்லலாம்னு தான் நினைச்சேன். ஆனா அவருக்கு வாங்கி கொடுக்க வேண்டிய கடமையும் இருக்கு. இவளுக்கும் அதை வாங்கிக்கிற உரிமையும் இருக்கு என சொல்கிறாள். இதற்கு கஸ்தூரி நல்ல விஷயம் கண்ணம்மா, எல்லா விஷயத்துலையும் இப்படி பொறுமையா முடிவு எடு என அட்வைஸ் பன்னுகிறாள்.

இதற்கிடையில் அஞ்சலி அகிலிடம், லட்சுமி, ஹேமா இருவருக்கும் பர்த்டே வருது. அத்தை எப்படியும் டிரெஸ் எடுப்பாங்க. நாமலும் ரெண்டு பேருக்கும் பர்த்டே கிப்ட்டா டிரெஸ் எடுத்து கொடுப்போமா என கேட்கிறாள். அதற்கு அகில், இது நீ தானா உடம்புல ஏதும் ஆவி புகுந்துட்டா என கிண்டல் செய்து மாறலாம் அஞ்சலி ஆனா இந்தளவுக்கா என ஆச்சரியமாக சொல்கிறான்.

மறுபக்கம் டிரெஸ் எடுத்து முடித்த பிறகு லட்சுமியையும், ஹேமாவையும் ஐஸ்கிரீம் சாப்பிட கடைக்கு அழைத்து வருகிறான் பாரதி. அவளிடம் டிரெஸ் பிடிச்சு இருக்கா என பாரதி கேட்டுகும்போது, சூப்பரா இருக்கு ஆனா பணம் தான் அதிகம் என லட்சுமி சொல்கிறாள். அப்போது ஹேமா என்னோட பர்த்டே அன்னைக்கு நீ இந்த டிரெஸ் தான் போட்டு வரணும் என சொல்லும்போது உன் பர்த்டே என்னைக்கு என லட்சுமி கேட்கிறாள். அவள் சொல்ற தேதிய கேட்டு அன்னைக்கு தான் என்னோட பர்த்டே என சொல்கிறாள் லட்சுமி.

அப்போது ஹேமா அப்போ பர்த்டே அன்னைக்கு என்கூட இருக்க மாட்டியா என கேட்கிறாள். அதற்கு பாரதி பர்த்டே அன்னைக்கு உன் அம்மாவை கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வந்துடு பெரிய கேக் வாங்கி வெட்டி ரெண்டு பேர் பர்த்டேவையும் கொண்டாடலாம் என லட்சுமியிடம் சொல்கிறான். அதற்கு லட்சுமி யோசிக்க இன்னிக்கு டிரெஸ் எடுக்க ஓகே சொன்ன மாதிரி அதுக்கும் ஓகே சொல்லுவாங்க நீ கேட்டு பாரு என கூறுகிறான். அப்போது எங்கம்மா கிட்ட கேட்டு சொல்றேன் அங்கிள் என்கிறாள் லட்சுமி. ஐஸ்கீரிம் சாப்பிட்டு முடித்தவுடன் நானே வந்து வீட்டில் விடுகிறேன் என பாரதி கூற வேண்டாம் நானே போகிறேன் என லட்சுமி கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bharathi Kannamma Serial Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: