/tamil-ie/media/media_files/uploads/2020/12/New-Project-2020-12-18T221610.323.jpg)
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல்களை இயக்கிய இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி சாய் பிரமோதித்தாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரவீன் பென்னட் தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் பார்வையாளர்கள் இடையே வரவேற்பை பெற்ற சீரியல்களின் பட்டியலில் ராஜா ராணி, பாரதி கண்ணம்மா சீரியல்களுக்கு நிச்சயமாக இடம் உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த 2 சீரியல்களையும் இயக்கியவர் இயக்குனர் பிரவீன் பென்னட். இவருக்கு சாய் பிரமோதித்தா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பென்னட்டின் மனைவி சாய் பிரமோதித்தா 2வது முறையாக கர்ப்பமானார். அண்மையில் கர்ப்பகால போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் பிரவீன் பென்னட். அந்த நிகழ்ச்சியில் தொலைக்காட்சி சீரியல் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் சாய் பிரமோதித்தாவுக்கு குழந்தை பிறந்தது. பிரவீன் பென்னட் - சாய் பிரமோதித்தா தம்பதியினர் புதிதாக பிறந்த குழந்தையுடனும் தங்களுடை செல்ல மகனுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.
பிரவீன் பென்னட்க்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.