Bharathi Kannamma Serial : விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல் நிற பேதத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.
Advertisment
வெண்பாவும் பாரதியும் டாக்டருக்கு படிக்கும்போதே ஃப்ரண்ட்ஸ். வெண்பா பாரதியை காதலிக்க, பாரதியோ வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறான். இது வெண்பாவுக்கு பிடிக்காமல் விபத்து ஏற்படுத்தி அந்தப் பெண்ணைக் கொல்கிறாள். எதிர்பாராத விதமாக அந்த விபத்தில் பாரதியும் மாட்டிக் கொள்கிறான்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
அவனுக்கு பெரிதாக எந்த சேதமும் ஏற்படாவிட்டாலும், பாரதியை அடையும் நோக்கில் இனி அவனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என உண்மைக்கு புறம்பாக சொல்லி விடுகிறாள் வெண்பா.
தோழி பொய் சொல்வாளா என்ற கோணத்தில், வேறு டாக்டரிடமும் பரிசோதிக்காமல் விட்டு விடுகிறான் பாரதி. அதன் பின்னர் கண்ணம்மாவை திருமணமும் செய்துக் கொள்கிறான். இதனால் பழி வாங்க துடிக்கும் வெண்பா, கண்ணம்மாவின் கர்ப்பத்தை தடுக்க, பாரதிக்கு தெரியாமல் மாத்திரை ஒன்றை கொடுத்து சாப்பிட சொல்கிறாள்.
பின்னர் அவளை பரிசோதனை செய்து, உனக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கம்மி என பொய்யான சான்றிதழையும் கொடுத்து விடுகிறாள். இந்த பொய் சான்றிதழ் கண்ணம்மாவை, அவளது பிறந்த வீட்டுக்கு அனுப்பும் அளவுக்கு கொண்டு போய் விட்டு விடுகிறது. மாமியாருக்கு ஏற்கனவே கறுப்பு என்றால் பிடிக்காது. இதனால் கண்ணம்மா வயிற்றில் குழந்தை பிறந்தால் கூட கொஞ்ச மாட்டேன் என்றவர். இனி அதுவும் பிறக்காது என்றதும், கோபத்தின் உச்சத்திற்கு சென்று அவளை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
நன்றாக படித்து மருத்துவராக இருக்கும் பெண்ணுக்கு இத்தனை மூர்க்க குணமா என பார்வையாளர் மத்தியில் கேள்வி எழுகிறது.