பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வைல்டு கார்டு போட்டியாளர்களில் ஒருவராக அன்னபாரதி பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. போட்டியாளரான பிரதீப், ஜோவிகா, மாயா மீது பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. நிக்சன் – ஐஷூ நட்பு மிகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்துள்ளனர்.
அதில் ஒருவர்தான் அன்னபாரதி. இவர் மிகப்பெரிய நகைச்சுவை நடிகையும், பட்டிமன்ற பேச்சாளராவும் உள்ளார். இவர் பள்ளி பருவத்தில், பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் இதனால் அவருக்கு பட்டிமன்றத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. எச்.டி.எப்.சி வங்கியில் ஒரு வருடம் வேலை பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோவில் பணிபுரிந்துள்ளார். மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கெடுத்துள்ளார்.
தொடர்ந்து கே டீவியில் மங்கையர் மன்றம் என்று பல பட்டிமன்றங்கள் போன்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் அதிகமாக மதுரை முத்துவுடன் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். மேலும் இவர் துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார்.
மேலும் இவர் சன் டிவியில் காமெடி ஜங்ஷன், சண்டே கலாட்டா, லொள்ளு சபா என பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று இருக்கிறார். மேலும் இவர் மீது பார்வையளர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“