பிக்பாஸ் புரோமோவில் நிக்சன், போட்டியாளர் அர்ச்சனாவை பார்த்து தகாத வார்த்தையில் திட்டி உள்ளார். இந்த புரோமோ தற்போது வைராகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சென்ற வாரம் ஜோவிகா வெளியேறினார். இந்நிலையில் நடிகை வனிதா, இவரை ஏர்போர்ட்டில் சந்திக்கும் விடியோ வைரானது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரின் ஆதரவு, தற்போது அர்ச்சனாவுக்குதான் உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியான புரோமோ அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. இதில் நிக்சனுக்கும், அர்ச்சனாவுக்கும் சண்டை ஏற்படுகிறது. இதில் நிக்சன், அர்ச்சனாவை பார்த்து ”பொண்ணா இது, சும்மா உப்புமா சாப்பிட்டுவதை விட்டுவிட்டு, அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுகிறார். நீ அழுவதால், பேசாமல் இருந்தால், பயந்து போவதாக நினைத்துகொண்டிருக்கிறாயா? நான் உன்னை கலாய்த்தால் 3 நாட்கள் அழுவாய். மூஞ்சப் பாரேன். சும்மா வினுஷானு சொல்லிகிட்டு இருக்கா? சொருகிடுவேன்” என்று பேசி உள்ளார். இந்நிலையில் பலரும் நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“