விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றனர்.
இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் மிரட்டல் நடனம் ஆடி டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வென்றனர். இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி மேடையில் ஐக்கி பெர்ரி தனது அம்மா மற்றும் அப்பாவை தேடி அழுதுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,எதுக்கு எல்லா இடத்துலயும் இந்த பொண்ணு இதையே சொல்லுதுனு நீங்க நினைக்கலாம் அவங்க தான் எனக்கு எல்லாமே என கூறியுள்ளார்,பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அப்பா எனக்கு போன் பண்ணி நண்பர்களிடம் அறிமுக படுத்தினார்.பின்னர் தற்போது வரை ஒரு போன் இல்லை ,மேலும் அவர்கள் சென்ற பிறகு என்னிடம் வெறுப்பாக பேசினார்கள்,எப்படி ஒரு மக்களிடம் போலியான அன்பை காட்ட முடிகிறது.என கதறி அழுதுள்ளார்.ஐக்கி பெரி பார்ப்பதற்கே பாவமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil