பிக்பாஸ் சீசன் 8-ல் புதிதாக 6 போட்டியாளர்கள் வைல்டு கார்டு மூலம் களமிறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு பிக்பாஸ் சீசனின் 8-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை எனத் தெரிந்து விட்டது. முன்னதாக அன்ஷிதா வெளியேற்றப்படவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், யாரும் எலிமினேஷன் செய்யப்படவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக, டி.எஸ்.கே, ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கப்போவதாக நேற்றைய தினம் தகவல் பரவியது. ஆனால், டி.எஸ்.கே-விற்கு பதிலாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக நடிக்கும் ராயன் மற்றும் ரியா தியாகராஜன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிதாக களமிறங்கப்போவதாக தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் பிக்பாஸ் போட்டியில், புதிய போட்டியாளர்களின் வரவு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.