தம்பி மீது தாக்குதல், ஒருத்தர் கூட சப்போட்டுக்கு வரல; மனம் திறந்த தர்ஷன்: தகராறுக்கு காரணம் என்ன?

நீதிபதியின் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தாலும் தகராறாலும் எப்படி தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் பாதிக்கப்பட்டார்கள் என்று அவர் ஒரு கூறியுள்ளார்.

நீதிபதியின் மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தாலும் தகராறாலும் எப்படி தர்ஷன் மற்றும் அவரது சகோதரர் பாதிக்கப்பட்டார்கள் என்று அவர் ஒரு கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
darshan

நடிகர் தர்ஷன் தனது வாழ்க்கையின் பல கசப்பான மற்றும் இனிமையான அனுபவங்களைப் பற்றி இண்டியாக்ளிட்ஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, அவரது தம்பி மீது நடந்த தாக்குதல் சம்பவம், அவரை தனிமையில் தள்ளியது எப்படி என்பதையும், அதன் பின்னணியில் உள்ள துரோகங்களையும் மனம் திறந்து பேசினார்.

Advertisment

தர்ஷன் தமிழ் மாடல் மற்றும் நடிகர் ஆவார். இவர் முதன்முதலில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றதன் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சி, அவரது உண்மையான குணம் மற்றும் நேர்மையான அணுகுமுறைக்காக ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தாலும், பிக்பாஸ் வீட்டில் அவர் கொண்டிருந்த ஆதரவு அவரை மக்கள் மனதில் நிலைநிறுத்தியது.

தர்ஷன் தனது தொழிலை ஒரு மாடலாகவே தொடங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், அவர் பல்வேறு ஃபேஷன் ஷோக்கள் மற்றும் விளம்பரங்களில் தோன்றியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. இதன் பிறகு, அவர் நடிகராக திரைப்படத் துறையிலும் அடியெடுத்து வைத்தார்.

கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தர்ஷன் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரப் படங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தார். இந்நிலையில் தர்ஷன் தம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை குறித்து கூறினார்.

Advertisment
Advertisements

தர்ஷனின் தம்பி ஒரு உதவி மேலாளர். அவர் மீது ஒரு நீதிபதியின் மகன் தாக்குதல் நடத்தி, "எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்" என மிரட்டியிருக்கிறார். இந்தச் சம்பவம் தர்ஷனின் தம்பியை மனதளவில் மிகவும் பாதித்து, அவர் முதன்முறையாக உடைந்து அழுதார். இந்த நிகழ்வு தர்ஷனுக்கு மிகுந்த வேதனையை அளித்தது. அதிலும், பலருக்கு உதவிய தனது அண்ணன் செந்திலின் நண்பர்கள் கூட இந்த இக்கட்டான நேரத்தில் உதவ வரவில்லை என தர்ஷன் வருத்தம் தெரிவித்தார். இந்தத் தனிமை உணர்வு அவரை அதிகம் பாதித்ததாகக் கூறினார்.

இந்தக் கசப்பான தருணங்களுக்கு மத்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், பல ஆடிஷன்களில் நிராகரிக்கப்பட்ட தர்ஷனுக்கு, கமல்ஹாசன் தான் ஒரு வாய்ப்பு கொடுத்து அவரது வாழ்க்கையைத் தொடங்க உதவினார். பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் கமல்ஹாசன் தன்னைத் தொடர்ந்து ஆதரித்ததாகவும், நிகழ்ச்சிக்குப் பிறகும்கூட அவரை அழைத்து பேசியதாகவும் தர்ஷன் நன்றி உணர்வுடன் கூறினார்.

கமல்ஹாசன் தர்ஷனை ஏமாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டுகளை தர்ஷன் மறுக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் பேட்ச் பற்றி பேசுகையில், கமல்ஹாசன் தனது மீது அக்கறை கொண்டதாகவும், ஒரு பட வாய்ப்பு இறுதி செய்ய தனிப்பட்ட முறையில் உதவியதாகவும் தர்ஷன் விளக்கினார். 

Dharshan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: