Bigg Boss Kavin: கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை கடந்துள்ளது. இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்த சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பது இந்த வாரத்தின் இறுதியில் தெரிந்துவிடும்.
Social experiment:
Would you all make losliya win, if I'm willing to take a slap from her on behalf of kavi?#KudumbathukullayaeKasuIrundhaCommissionKekalamLa #SuyanalamKarudhi #ImAnAgentOfChaosToo #ILikePlayingStrategyGames
— Pradeep Antony (@TheDhaadiBoy) October 1, 2019
16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் அதிக சர்ச்சைகளுக்குள்ளாகி, அதிக ரசிகர்களையும் பெற்றவர் கவின். ஃபைனலுக்கு போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டு அவர் வெளியேறியது கவின் விசிறிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் கடந்த வார எவிக்ஷனில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார். அதனால் தற்போது முகென், சாண்டி, ஷெரின், லாஸ்லியா ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கவினை அறைந்த, கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி, லாஸ்லியாவிற்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.
அதாவது கவினை கன்னத்தில் அறைந்த பிரதீப், ஒருவேளை நீ டைட்டில் ஜெயித்தால் மேடையில் வைத்து இந்த அடியை எனக்குத் திருப்பிக் கொடு என்று கூறியிருந்தார். கவின் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது அந்த அடியை லாஸ்லியாவிடம் வாங்க விரும்புகிறாராம் பிரதீப். ”நான் அடி வாங்குவதற்கு தயார், லாஸ்லியாவை நீங்கள் எல்லாம் ஜெயிக்க வைப்பீர்களா” என தனது பிரச்சார யுக்தியை ட்விட்டரில் அவர் தொடங்கியிருக்கிறார்.
அதோடு, முகென் சிறந்த போட்டியாளர் என்ராலும், லாஸ்லியா சிறந்த ”ஹ்யூமப் பீயிங்” என்ற சான்றிதழையும் வழங்கியிருக்கிறார் பிரதீப்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.