/indian-express-tamil/media/media_files/GoCCyUln0Nu6YIG7s2aB.jpg)
பிக் பாஸ் ப்ரோமோ; மாயா, பூர்ணிமா கேமை விமர்சிக்கும் விசித்திரா; மாயா பதில் என்ன?
மாயாவும் பூர்ணிமாவும் ஒண்ணா இருந்தாங்கன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரு தனி உலகத்தில் இருக்கிற மாதிரி இருப்பாங்க என விசித்திரா சொல்வதாக இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக் கட்டம் நெருங்கி வருவதால் போட்டியாளர்கள் இடையே கடுமையான போட்டியும் சண்டையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. முன்னதாக, சனிக்கிழமை எபிசோட்டில் கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு இந்த வாரத்தில் ஸ்மால் வீட்டிற்கு செல்வதற்காக 6 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார்.
அப்போது விசித்திரா மாயாவும் பூர்ணிமாவும் ஒண்ணா இருந்தாங்கன்னா அவங்க ரெண்டு பேரும் ஒரு தனி உலகத்தில் இருக்கிற மாதிரி இருப்பாங்க. அதனால எனக்கு ஓகே இல்லை என்று சொல்கிறார். அதற்கு மாயா, திருப்பி திருப்பி மாயாவும் பூர்ணிமாவும் ஒரே கேம் விளையாடுறாங்க என்று சொல்றாங்க. அந்த கேம் உங்களுக்கு அஃபெக்ட் பண்ணலலா, அந்த கேம் உங்க கேமை அஃபெக்ட் பண்ணுதா என்று விசித்திராவிடம் கேட்கிறார்.
அதற்கு விசித்திரா எழுந்து நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து விளையாடிட்டு எங்களை கண்டுக்கவே மாட்டீங்க என்று சொல்கிறார். அதை தொடர்ந்து பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது பூர்ணிமா எனக்கு மைண்ட் உண்மையில் டிஸ்டர்பா இருக்கு என்று சொல்கிறார். அதற்கு மாயா இனிமே நாம ரெண்டு பேரும் பேசவே வேண்டாம் என்று கூறுகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இதுவரைக்கும் மாயா கூட்டணியில் இருந்த விசித்திரா இன்று விலகி இருப்பதால் இந்த வாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.