தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஜோடியாக சேர்ந்து நடித்த பலர் காதலித்து திருமணம் செய்துகொண்ள்ளனர். அவர்களில் சில ஜோடிகள் மட்டுமே வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை தொடர்கின்றனர்.
அந்த வகையில், ஆரம்ப காலகட்டத்தில் நிஜ வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஜோடியாக தினேஷ் - ரச்சிதா தம்பதி இருந்து வந்தனர். இவர்கள் ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் சீரியலிலேயே நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தங்கள் கரியரைத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே இருவரும் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தது அப்போது பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ரச்சிதா மற்றும் அவருடைய கணவர் தினேஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
அதைத்தொடர்ந்து கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரச்சிதா கலந்து கொண்டிருந்தார். அப்போது ஆரம்பத்திலிருந்து தினேஷ் ரச்சிதாவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தார். தினேஷ் - ரச்சிதா ஜோடி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தினேஷ் தன்னை போனில் மெசேஜ் செய்து மிரட்டுவதாக ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து,
சில மாதங்களுக்கு முன்பு ரச்சிதாவின் அப்பா இறந்தபோது, பெங்களூரு சென்று வந்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக தினேஷ் அறிமுகமாகி இருக்கிறார். அவர் ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய மனைவி ரச்சிதா தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் என்றும் தன்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி அவருக்கு பரிசளிப்பேன் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து வந்தார்.
பிக் பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்க்கில் தினேஷ் தான் கடந்த மோசமான காலகட்டம் என்றால் அது தன்னுடைய மனைவியோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு அனுபவித்த காலகட்டம் என்று கூறினார்.
இதனால், ரசிகர்கள் பலரும் தினேஷ் - ரச்சிதா ஜோடி சேர்ந்து வாழ வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், ரச்சிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் எமோஷனலாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், “எல்லா மக்களும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை அனுபவித்து இருப்போம் என்பதை பற்றி யாரும் யோசிக்கவே இல்லை" என்று கூறி, "பட்டவங்களுக்கு தானே அதோட வலி தெரியும்" என்று கூறியிருக்கிறார்.
இதனால் தினேஷ் உடன் சேர்ந்து வாழப் போவதில்லை என்று ரச்சிதா மறைமுகமாகக் கூறியிருப்பதாகவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து பதிவிடும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“