பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜோவிகாவை விசித்ரா மீண்டும் சீண்டுவதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், போட்டியாளர்களிடம் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சி விறுவிறுப்பை அடைந்துள்ளது.
இந்தநிலையில், பிக் பாஸ் வீட்டில் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா படிப்பு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பேசுபொருளாகியுள்ளன. ஒன்பதாம் வகுப்போடு எனக்கு படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டேன்.படிப்பு மட்டும் தான் மனிதனுக்கு வாழ்க்கை இல்லை. அதை தாண்டி நிறைய திறமைகள் உள்ளன. எனக்கு பிடித்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று ஜோவிகா கூறினார்.
இதற்கு விசித்ரா, யாராகயிருந்தாலும் அவர்களுக்கு அடிப்படை கல்வி அவசியம் என்று கூறினார். டாக்டர் ஆகு, என்ஜினியர் ஆகு என நான் சொல்லவில்லை. அடிப்படைக் கல்வி இருக்க வேண்டும். டிக்கெட் புக் செய்ய, பேங்க் போனால் என பல விஷயங்களுக்கு அது அவசியம் என விசித்ரா கூறுகிறார். இந்த விவகாரம் காரணமாக ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. பின்னர் கமல்ஹாசன் அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்தநிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஜோவிகாவுக்கும் விசித்ராவுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது கோல்ட் ஸ்டாருக்கான அந்தப் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் மற்றப் போட்டியாளரை விட மக்களை எந்த அளவுக்கு எண்டர்டெயின்மெண்ட் பண்ணிருக்கீங்க என சொல்லனும் என்று சொல்லச் சொல்கிறார். இதுகுறித்து மற்ற போட்டியாளர்கள் விவாதிக்கிறார்கள். இதனையடுத்து ஒவ்வொரு போட்டியாளாராக தாங்கள் செய்ததை கூறுகிறார்கள். மாயா கிருஷ்ணன் நிறைய காஸிப் பேசியிருக்கிறேன் என்று கூறுகிறார்.
இப்படியாக ஒவ்வொரு போட்டியாளரும் பேசுகிறார்கள். இதில் ஜோவிகா, நான் சீரியஸனா விஷயத்திலும் இருந்திருக்கிறேன். காமெடியான விஷயத்திலும் இருந்திருக்கிறேன் என்று கூறுகிறார். இதற்கு விசித்ரா வேணும்னே சில விஷயங்களை பேசுறியா எனக் கேட்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் ஜோவிகா இதற்கு என்ன பதில் கொடுத்திருப்பார் என ரசிகர்கள் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“