பிக்பாஸ் 8: தர்ஷா சாபம் சும்மா விடல.. வீட்டில் இருந்து வெளியேறியது யார்?

பிபி வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் ? தர்ஷாகுப்தா கொடுத்த சாபம்தான் பெண் போட்டியாளர்கள் வரிசையாக வெளியேற காரணம் என ரசிகர்கள் கமெண்ட் .

பிபி வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் ? தர்ஷாகுப்தா கொடுத்த சாபம்தான் பெண் போட்டியாளர்கள் வரிசையாக வெளியேற காரணம் என ரசிகர்கள் கமெண்ட் .

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Biggboss 8

பிக் பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இந்த வாரம் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருந்து வந்த ஒரு நபர் தப்பித்த நிலையில், மற்றொரு போட்டியாளர் வெளியேறியுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன. 

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெஃப்ரி, சுனிதா, பவித்ரா, அன்ஷிதா, சத்யா, அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின் மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோர் நாமினேட் ஆனார்கள். முத்து, ஆர்ஜே ஆனந்தி, சாச்சனா, சவுந்தர்யா, விஜே விஷால்  என ஒட்டுமொத்தமாக 9 பேர் நாமினேட் ஆனார்கள்.  

இதில் முதல் நபராக ஜெஃப்ரி சேவ் ஆகி உள்ளார். டேஞ்சர் ஜோனில் பவித்ரா, அன்ஷிதா மற்றும் சுனிதா ஆகிய 3 பேர் குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் சுனிதாவுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்து விட்டது.

Advertisment
Advertisements

இறுதியில் அன்ஷிதா பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த வாரம் தர்ஷா குப்தாவுக்கு ஃப்ரீ பாஸ் கொடுக்காமல் அவர் அவுட் ஆன நிலையில் தர்ஷா கொடுத்த சாபமே பெண் போட்டியாளர்கள் வெளியேற காரணம் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.  

கடந்த வாரம் வெளியேறிய தர்ஷா இனிமேல் ஒவ்வொரு வாரமும் ஒருத்தர் வெளியே வருவீங்க என கூறிய நிலையில் ஆண் போட்டியாளர்கள் தப்பித்துக் கொண்டு பெண் போட்டியாளர்கள் வெளியேறி வருகின்றனர். 

biggboss Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: