Advertisment

இவர் இருக்கும் நம்பிக்கையில் தான் பிக்பாஸ் வந்தேன் : கஸ்தூரி - ரொம்ப ஓவராத்தான் போகுது

Bigg Boss Tamil 3, Episode (46) Written Update: கஸ்தூரி வந்துள்ள நிலையில், பிக்பாஸ் வீடு மட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களிடையேயும் பெரும்பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 3 Episode (46), Bigg Boss Tamil 3 Day (8th August, 2019)

bigg boss tamil 3, bigg boss tamil 3 contestants, bigg boss tamil 3 eviction, bigg boss tamil 3 (8th August, 2019) written update, bigg boss tamil 3 episode (46) written update, bigg boss tamil 3 day (46) written update, kamal haasan, bigg boss tamil, reality show, bigg boss tamil 3 written update, bigg boss tamil 3 preview

Bigg Boss Tamil 3 Episode (46):பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக, மக்களை மகிழ்வித்து வருகிறது. பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார், மீரா மிதுன் சரவணன் உள்ளிட்டோர் வெளியேறியுள்ள நிலையில், வைல்டு கார்டு மூலம், கஸ்தூரி உள்ளே வந்துள்ளார்.

Advertisment

கன்டெஸ்டண்டாக கஸ்தூரி வந்துள்ள நிலையில், பிக்பாஸ் வீடு மட்டுமல்லாது, அந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களிடையேயும் பெரும்பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் போதே, இந்த நிகழ்ச்சி குறித்து இவர் தெரிவித்த கருத்து, தற்போது அவர் அந்த நிகழ்ச்சியிலேயே பங்கேற்றுள்ளது உள்ளிட்டவைகள், ரசிகர்களிடம் இந்நிகழ்ச்சி குறித்து எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெற்ற டாஸ்கில் சிறந்து விளங்கிய போட்டியாளர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின் மணி ஒலித்தவுடன் உள்ளே வந்த போட்டியாளர்களுக்கு காத்திருந்தது ஆச்சர்யம். பெரிய பரிசுப்பெட்டியை திறந்து பார்த்த போது அதிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் சீசன் 3-க்கான முதல் வைல்டு கார்டு போட்டியாளராக கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார்.

45 நாட்கள் வெளியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவர் வந்துள்ளதால், அனைத்து போட்டியாளர்களும் திகைப்படைந்துள்ளனர். பிறகு மெல்ல மெல்ல சிரித்து, பேசி பழகி அனைவரிடமும் அறிமுகமானார். லாஸ்லியாவை பார்த்ததும் அவர் கலாய்க்க தொடங்கிவிட்டார். சேரன் இருக்கும் நம்பிக்கையில் தான் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததாக அவர் கூறினார்.

வீட்டுக்குள் பிக்பாஸ் பிரமாண்ட சப்தம் ஒலித்தது. அதை தொடர்ந்து லக்சுரி டாஸ்க்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது.

இதில் அனைவரும் ஒருமனதாக சேரன், சாண்டி மற்றும் லாஸ்லியாவின் பெயரை பரிந்துரைத்தனர். அப்போது குறுக்கிட்ட பிக்பாஸ், தலைவர் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த மூவரும், தாங்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் தான் என்பதை கஸ்தூரியிடம் பேசி நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மூவருடைய பேச்சையும் கேட்ட கஸ்தூரி, சேரன் - சாண்டி - லாஸ்லியா ஆகியோர் தலைவர் போட்டிக்கு தகுதியானவர்கள் தான் என பிக்பாஸிடம் கூறினார். மேலும், கஸ்தூரிக்கு அவர் 5 சூப்பர் பவர்களை வழங்கினார். அதன்படி, சாக்‌ஷியை தலைகீழாக நிற்க சொன்னார். மதுமிதாவை தர்ஷனுக்கு குடை பிடிக்க வைத்தார். யாரேனும் கழிவறைக்கு சென்றால் அபிராமி பாட வேண்டும் என்றார். முகினை மூக்கால் ‘மன்னித்து விடு’ என்று எழுத வைத்தார்.

இதற்கான டாஸ்க்குகள் நடந்த அனைத்து தருணங்களும் நிகழ்ச்சியில் சிரிப்பை வரவழைத்தன. குறிப்பாக தர்ஷன், மதுமிதாவை செல்லும் இடங்களில் எல்லாம் குடை பிடிக்க வைத்தது சிரிப்பை வரவழைத்தது. கஸ்தூரி தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று தோப்புக்கரணம் போட வைத்தார். கஸ்தூரியின் வருகை பிக்பாஸ் வீட்டுக்கு புதிய ரத்தம் பாய்ச்சியுள்ளது. எனினும், 45 நாட்கள் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அவர் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனால் அவருடைய யுக்தியை முறியடித்து நிகழ்ச்சியில் அவரை பின்தங்கச் செய்ய போட்டியாளர்கள் முயற்சி செய்வார்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment