Bigg Boss Promo: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரொமோக்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
அதில் முதல் புரொமோவில், பிக்பாஸ் வீடு 2 கிராமங்களாக மாறப் போகிறது என்று வந்த அறிவிப்பை அடுத்து, கிராமம் செட்டப் உருவாக்கப்படுகிறது. அதனால் போட்டியாளர்கள் அனைவரும் கிராமத்து உடையணிந்து, கிராமத்து பேச்சு வழக்கில் பேசிக் கொள்கின்றனர். நாம் மறந்து விட்ட, இந்த மண்ணின் பாரம்பரிய கலைகளை பயிற்றுவிப்பதற்காக, சில கலைஞர்கள் வருகிறார்கள், என்ற பிக்பாஸின் அறிவிப்பையடுத்து, அங்கே ஓர் பொம்மலாட்ட கலைஞர் வந்து, பயிற்றுவிக்கிறார். நீங்கள் இதை முறையாக கற்றுக் கொண்டு, தினமும் மாலை அரங்கேற்ற வேண்டும் எனவும் பிக்பாஸ் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
Advertisment
Advertisements
இரண்டாவது புரொமோவில் கவினும், லாஸ்லியாவும் வழக்கம் போல் தனியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது, “ஏ ஏ எந்திரி” என செல்லமாக லாஸ்லியாவை அதட்டி காதை பிடித்து திருகுகிறார் வனிதா. ”ரெண்டு குடும்ப மானமும் கெட்டு போயிரும், ஊரே பாத்து சந்தி சிரிச்சிரும். உங்க மாப்பிளைக்கிட்ட இந்த சனிக்கிழமை பேசுறோம்” என வனிதா சொல்ல, “நான் என்ன சொல்றேன்னா, அவன வெளிநாட்டுக்கு அனுப்பிச்சோம்ன்னா 3 வருஷம் அங்க இருக்கட்டும்” என சேரன் சொல்ல, “அப்போ சனிக்கிழமை சொல்லி கூட்டிட்டு போக சொல்வோம்” எனக் கூறி வனிதாவும் ஷெரினும் சிரிக்கிறார்கள்.
மூன்றாவது புரொமோவில், லாஸ்லியாவை நிற்க வைத்து, மற்ற ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்து கேள்வி கேட்கிறார்கள். அப்போது, “சேரப்பாவ நாமினேட் பண்ணிட்டேன்னு அங்க உக்காந்து அழுதீங்க, அந்த ஒரு விஷயத்தை தாங்க முடியாத நீங்க, எப்படி இத கடந்து ஃபைனலுக்கு போவிங்க” என தர்ஷன் கேட்க, “அப்போ அவங்க தப்பா பட்டாங்க, அவங்கள நாமினேட் பண்ண கூடாதுன்னு நான் அவங்க கிட்டயும் சொல்லிருக்கேன், அத தாண்டி என்னோட கவின் கிட்டயும் சொல்லிருக்கேன், ஆனா என்னால முடில” என லாஸ்லியா கூற, “அப்போ யாராவது உங்கள இன்ஃப்ளுயன்ஸ் பண்ணாங்களா” என சேரன் கேட்கிறார். அதற்கு, “யாரும் என்ன இன்ஃப்ளூயன்ஸ் பண்ணல” என்கிறார் லாஸ்லியா