Bigg Boss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்களைத் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 16 போட்டியாளர்களைக் கொண்டிருந்த இந்தப் போட்டியிலிருந்து முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
அவர் வெளியேறும் போது, இந்த வீட்டில் தலைவராகும் தகுதி யாருக்கு இருக்கிறதென்று கேட்டதற்கு, சாண்டி, தர்ஷன் மற்றும் அபிராமி ஆகியோரின் பெயர்களைக் கூறினார் பாத்திமா. இந்நிலையில் இந்த வார தலைவராக அபிராமி தேர்வாகியிருக்கிறார்.
கடந்தவாரம் தங்களுக்குள் நடந்த சண்டையை அபிராமியும் மதுமிதாவும் மீண்டும் பேச, அதை ஷெரினிடம் தெரிவித்தார் அபி. இடையில் வனிதா புகுந்து சண்டை மூட்டும் விதமாகப் பேச, கோபமானார் அபிராமி. இருவருக்கும் எழுந்த சண்டையில் ‘மீன் மார்க்கெட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திவிட்டார் அபிராமி. இதனால் வனிதா கோபமுற்றார்.
இறுதியில் வனிதா, ஷெரின், சாக்ஷி ஒரு கூட்டணியாகவும், கடந்த வாரத்திலிருந்து சண்டை போட்டுக் கொண்ட, மதுமிதா, அபிராமி இன்னொரு கூட்டணியாகவும் பிரிந்திருக்கிறார்கள்.