Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 41-வது நாளை எட்டியிருக்கிறது. இதுவரை எளிமையான டாஸ்க்குகள் வழங்கப்பட்ட நிலையில், இதன் பின்னர் தான் கடினமான டாஸ்க்குகள் வழங்கப்படும். கடந்த வாரம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டத்திற்காக பெரிதாக டாஸ்க்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. எலிமினேஷனும் இல்லை என்பதால், போட்டியாளர்கள் கொண்டாட்டமானார்கள். ஆனால் இது ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் தொடர்ந்து 45 மணி நேரம் டாஸ்க்கில் ஈடுபட வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார். அதற்கு மணிக்கூண்டு டாஸ்க் எனப் பெயரிடப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிந்து இந்த போட்டியில் பங்கேற்க வேண்டும். காற்று, மழை என அனைத்தையும் தாங்கி இறுதி வரை யார் தாக்குப் பிடிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த டாஸ்க்கின் வெற்றியாளர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த ப்ரோமோவில், என்னடா 10 குடம் மட்டும் தான் விடுறீங்க என நிஷா தான் முதலில் போய் சோமிடம் சண்டை போடுகிறார். அதன் பின் அர்ச்சனாவை பார்த்து குடத்தில் தண்ணி பிடிக்க வந்தியா இல்ல, குடத்தை திருட வந்தியா என கோபத்துடன் கேட்கிறார். இதனால் இருவருக்கும் நடுவில் சண்டை ஏற்படுகிறது. இருவரும் மாறிமாறி முடியை பிடித்துக் கொண்டு சண்டை போடுகிறார்கள். ஆனால் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதுவும் டாஸ்க் தான்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”