Bigg Boss Tamil 4 Promo: தினமும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அது குறித்து வெளியாகும் ப்ரோமோக்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய தினத்துக்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய ப்ரோமோவில், ரேகாவுக்கும், சனம் ஷெட்டிக்கும் இடையே புதிய பிரச்னை வெடித்துள்ளது. 'எனக்கு சண்டை போடணும்ன்னு இஷ்டம் இல்ல சனம்' என ரேகா கூறுகிறார். ”சாப்பாடு, பருப்பு வச்சது தப்பா. நான் உனக்கு உதவி தான் செஞ்சேன்" என ரேகா சனம் ஷெட்டியிடம் கூற, அதற்கு ரம்யா பாண்டியன் 'யாருக்கும் உதவி செய்யாதீங்க' என்கிறார். அதைக் கேட்டு கோபமான ரேகா, 'நான் குக்கிங் டீம் கேப்டன்" என்கிறார்.
அதனால் யார் கேப்டன் என ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா இடையே வாக்குவாதம் நடக்கிறது. 'நீங்கள் வீட்டின் கேப்டன், நான் குக்கிங் டீம் கேப்டன்' என சொல்கிறார் ரேகா. பிரச்னையை தொடர்ந்து தலையில் அடித்துக் கொள்கிறார் சனம்.
அடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோ-வில், சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித், ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் ஆகிய நால்வரும் அடுத்த வார நாமினேஷன் லிஸ்டில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனை சம்யுக்தா அனைவர் முன்னிலையில் அறிவித்தார். இவர்களை தவிர மற்றவர்களின் கதைகள் போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அதனால் தான் இந்த நான்கு பேரையும் சொல்கிறேன் என்கிறார் சம்யுக்தா. ஸோ அடுத்த ரணகளத்துக்கு ரெடியாகி விட்டது.
அடுத்து வெளியான 3-வது ப்ரோமோவில், ”என் பேரண்ட்ஸ் என்னை பள்ளியில் சேர்த்து விட்டதோட சரி. 12-ம் வகுப்பு வரைக்கும் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு கூட வந்தது கிடையாது. நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தலை வலிக்கும், என்னன்னு எழுந்து பார்ப்பேன். பக்கத்துல அப்பா கைல கேஸ் ட்யூப் வச்சிட்டு நிப்பாரு. அப்போ தான் என்னை அடிச்சிருக்காருன்னு உணர்வேன். அப்பாவுடன் சேர்ந்து அம்மாவும் ஆல்கஹாலிக்.. உங்களால் குழந்தையை பெத்து சரியாக வளர்க்க முடியலன்னா, எதுக்கு குழந்தை பெத்துக்குறீங்க” என பாலாஜி தனது கதையை அழுதுக் கொண்டே சொல்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”