'நா பாதி முகத்த தான் காட்டுவேன்னா எப்படி?’ ரியோவை திணற வைத்த அனிதா

'இது டாஸ்க் என்பதால் கண்ட்ரோலாக இருந்தேன்'

'இது டாஸ்க் என்பதால் கண்ட்ரோலாக இருந்தேன்'

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 Promo

Bigg Boss Tamil 4 Promo

Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் இல்லத்தில் தற்போது கால் சென்டர் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் வாடிக்கையாளர் மைய சேவை ஆட்களாக இருந்தவர்கள், இந்த வாரம் வாடிக்கையாளர்களாகி கேள்வி கேட்கிறார்கள்.

Advertisment

அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில், நீங்கள் தனிப்பட்ட போட்டியாளராக விளையாடுறீங்களா? என அனிதா கேட்க, நான் தனியா தான் விளையாடுகிறேன் என ரியோ பதில் கூறுகிறார். ஆனால் அப்படி தெரியவில்லை என்கிறார் அனிதா. வெளியில் போடாத ஒரு முகமூடியை இங்க போட்டுட்டு வந்திருக்கீங்க என குற்றம்ச்சாட்டும் அனிதா, 'நான் பாதி முகத்தை தான் காட்டுவேன், நீ எனக்கு trophy கொடு என சொன்னால் மக்கள் எப்படி கொடுப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்க" என ரியோவிடம் கேட்கிறார்.

Advertisment
Advertisements

தொடரும் அனிதா, விமர்சனம் சொல்ல யாரவது எழுந்தாலே அவங்கள உட்கார வச்சிடுறீங்க எனக் கூற, நான் அப்படி இல்லை என ரியோ விளக்கம் கொடுக்கிறார். மற்றொரு கேள்விக்கு ரியோ பதில் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், 'நான் கேட்கும் கேள்வியை புரிந்துகொண்டு நீங்கள் பதில் சொன்னால் நன்றாக இருக்கும்' என நினைப்பதாகக் கூறுகிறார். டாஸ்க் முடிந்து வெளியில் வந்த பிறகு அனிதாவிடம் 'Good call' என ரியோ பாராட்டுகிறார். ஆனால் உள்ளே சென்று சோம் உள்ளிட்டவர்களிடம் 'இது டாஸ்க் என்பதால் கண்ட்ரோலாக இருந்தேன்' என்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil Bigg Boss

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: