Bigg Boss Tamil 4 Promo: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு வழியாக ‘மணிக்கூண்டு’ டாஸ்க் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து, அர்ச்சனா, சம்யுக்தா, சோம் குழுவினர் முதலிடத்தைப் பிடித்தனர். அதனால் அவர்களுக்கு 1000 மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. கடைசி இடத்தை பாலா, ரம்யா, சுசித்ரா ஆகிய மூவரும் பிடித்தனர். அவர்கள் 200 மதிப்பெண்களை மட்டுமே பெற்றனர்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில், ’மணிக்கூண்டு டாஸ்கில் கடைசி இடம் பிடித்த பாலா, சுச்சி, ரம்யா இவங்கள்ல இருந்து 2 பேரை தேர்வு செய்ங்க’ என்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் பாலாவையும், சுச்சியையும் தேர்ந்தெடுக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் தனியறையில் அடைக்கப்படுகிறார்கள். அந்த அறைக்கு வெளியே ஷிவானியும், சனமும் பாலாவிடம் பேசுகிறார்கள். ’நீ ஏன் ஓர்ரி பண்ற’ என்றவாறு பாலா அங்கிருந்து நகர்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”