பாலாவின் அலட்சியம்: கடினமான டாஸ்க்கில் போட்டியாளர்கள்!

நேரம் எவ்வளவு முக்கியமானது என்ற அடிப்படையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டது.

நேரம் எவ்வளவு முக்கியமானது என்ற அடிப்படையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
Bigg Boss Tamil 4 Promo

பிக் பாஸ் ப்ரோமோ

Bigg Boss Tamil 4 Promo : பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிரச்னைகளுக்கும், சந்தோஷத்திற்கும் எந்த குறைவும் இருக்காது. அந்தளவுக்கு ரசிகர்களை என்கேஜ்டாக வைத்திருக்கிறது.

Advertisment

நேரம் எவ்வளவு முக்கியமானது என்ற அடிப்படையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மணிக்கூண்டு டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் நேரத்தை கணக்கிடுவது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா வேலையையும் முடிக்க வேண்டும் என்பதே அடிப்படை விதி.

Advertisment
Advertisements

இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஐந்து அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியிலும் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் அணியில் அனிதா, சனம், நிஷாவும் இரண்டாவது அணியில் பாலாஜி, சுசித்ரா, ரம்யாவும் மூன்றாவது அணியில் கேப்ரில்லா, ரியோ, ஆரியும் நான்காவது அணியில் சோம், சம்யுக்தா, அர்ச்சனாவும் ஐந்தாவது அணியில் ஆஜித், ஷிவானி மற்றும் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றனர். தற்போது போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை எவ்வளவு சிரமத்துடன் செய்து வருகிறார்கள் என்பதை ப்ரோமோவில் காட்டியிருக்கிறார்கள்.

அடுத்த ப்ரோமோவில், அனிதா குழுவினருக்கான நேரம் முடிவடைகிறது. அடுத்து பாலா தான் அந்த டாஸ்க்கை தொடர வேண்டும். ஆனால் பாலாவோ தூங்கிக் கொண்டிருக்கிறார். ’நாங்க இறங்கிருவோம், நீங்க தான் பாத்துக்கணும்’ என்கிறார் அனிதா. கூலாக எழுந்த பாலா, ‘ஏன் பதறுறீங்க’ என்கிறார். ‘5 நிமிஷத்துக்கு மேல ஆனா, பட்ஜெட் போகும் டா எனக்கு ஒண்ணும் இல்ல நிக்கிறதுக்கு’ என்கிறார் சனம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: