பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களின் பாதுகாப்புக்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து சனிக்கிழமை அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இதற்கான காரணத்தை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவீனா கூறியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில், மிகவும் உறுதியான போட்டியாளராக இருந்த பிரதீப்புக்கு அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து சனிக்கிழமை வெளியேற்றப்பட்டார். பெண்களின் பாதுகாப்புக்காக பிரதீப் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தியது. பிரதீப்புக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்புக்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது குறித்து பிக் பாஸ் வீட்டிலும் விவாதாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள விசித்ரா, ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்தவர்களிடம் நீங்கள் பெண்களிடம் பிரதீப் தவறாக நடந்து கொண்டான் என்று சொன்னது தவறு என்று பேசினார்.
இதற்கு ரவீனா தான் எதற்காக பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தேன் என்று விளக்கம் அளித்துப் பேசினார். அதில் பூர்ணிமா பற்றி தவறான அர்த்தத்தில் பிரதீப் பேசியதாக கூறிய வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகி வருகிறது.
அதே நேரத்தில், பிரதீப்புக்கு ஆதரவாக பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள், ரசிகர்கள் என பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை போட்டியாளர்கள் இடையே விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய விசித்திரா, “பிரதீப்புக்கு எல்லாரும் சேர்ந்து ரெட் கார்டு கொடுத்தது தவறு. அவர் ஏதாவது தப்பா பேசி இருந்தா அப்போதே நீங்க தட்டி கேட்டிருக்க வேண்டும். இத்தனை பேரும் சேர்ந்து பிரதீப்புக்கு பெண்கள் வன்கொடுமையாளர் என்று பட்டம் கொடுத்து வெளியே அனுப்பி இருப்பது அவனுடைய வாழ்க்கையை முடித்து விடும். இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினஅர்.
அப்போது ஸ்மால் பாஸ் வீட்டில் இவர்களோடு இருந்த ரவீனா, “நான் எதற்காக பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தேன் தெரியுமா? போன வாரம், புட்பால் கேம் நடந்தது இல்லையா, அப்போது பூர்ணிமா தான் ஜட்ஜா இருந்தாங்க. அப்போ பூர்ணிமா குனியும் போது பூர்ணிமாவை பார்த்து பிரதீப் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருந்து சத்தமாக ரொம்ப குனியாத அவனுங்க எந்த பந்தை அடிக்கிறாங்கன்னு தெரியல என்று கத்தி பேசினார். அதுபோல, பூர்ணிமா அப்போ ஷார்ட்ஸ் போட்டு இருந்தாங்க. அதனால தன் மடியில் பெட்ஷீட் வைத்து மறைச்சுகிட்டு இருந்தாங்க. அதுக்கு பிரதீப் ஏய் மறைக்காதன்னு சொல்லி சிரிச்சார்” என்று ரவீனா கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், பிரதீப் ரசிகர்கள் டாஸ்க் நடந்தபோது பிரதீப் பூர்ணிமாவிடம் தான் பேசியதற்கு விளக்கம் கொடுத்த ஒரு வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவில் பூர்ணிமா பிரதீப்பிடம் “நீ ஸ்மால் பாஸ் வீட்டுக்குள்ள இருந்து என்ன கத்தி பேசுன என்று கேட்க, அதற்கு பிரதீப் நான் உன்னை தப்பா பேசல. நீ அங்கு குனிஞ்சி நின்ன, அப்போ உனக்கு முன்னாடி ஒருத்தன் பந்து அடிப்பதற்கு தயாரா இருந்தான். உனக்கு பின்னாடி ஒருத்தன் நின்னான். அப்போ அவன் எந்த பந்தை அடிக்க போறான்னு தெரியலன்னு தான் சொல்லி கிண்டல் பண்ணினேன” என்று கூறினார். அதுமட்டுமில்லாமல், பிரதீப் தனக்கு பெண்களுடைய உடம்பெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது என்கிற விதமாக பூர்ணிமாவிடம் பேசிய வீடியோவும் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.