பிக் பாஸ் சீசன் 7 கடந்த வாரம் தொடங்கியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சீசன் தொடங்கிய முதல் வாரமே சண்டை, சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக வனிதா மகள் ஜோவிகா- நடிகை விசித்திரா இடையே ஏற்பட்ட கல்வி தொடர்பான மோதல் பிக் பாஸையும் தாண்டி பொதுமக்கள் இடையேயும் விவாதம் ஆனது.
ஜோவிகா தான் 9-ம் வகுப்பு படித்தபோது படிப்பு வரவில்லை என்பதால் நின்றுவிட்டேன் என்று சொல்ல, ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஏன் படிப்பை நிறுத்திவிட்டாய் என்று அட்வைஸ் செய்ய தொடங்கினர். இதில் விசித்ரா படிப்பு தான் முக்கியம், என்ன கஷ்டமாக இருந்தாலும் பள்ளி கல்வியாவது 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என்று கூறினார்.
அவர் சொல்லும்போது ஜோவிகா அதை கண்டுகொள்ளாத நிலையில், இதுவே பிரச்சனையின் மையமானது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் நிகழ்ச்சி தொகுப்பாளரும் உலகநாயகனுமான கமல்ஹாசன் இந்த பிரச்சனை பற்றி பேசினார்.
ஜோவிகாவிடம் நீங்கள் எப்போதாவது கல்வி முக்கியமில்லை என்று சொல்லியிருக்கிறீர்களா என்று கேட்கிறார். தொடர்ந்து விசித்ராவின் இன்டன்ஷன் தப்பில்லை என்றும் கமல்ஹாசன் சொன்னார். பின்னர் கற்றல் விதி இருக்கலாம், ஆனால் கற்றல் வதை இருக்கவே கூடாது என கமல் மேலும் கூறினார். இந்த பிரச்சனை அப்போது சுமூகமாக முடிந்தது.
இதையடுத்து நிகழ்ச்சியில் கமல் சென்ற பிறகு ஹவுஸ்மெட்ஸிடம் ஜோவிகா உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
அப்போது, சிறு வயதில் பட்ட கஷ்டங்களைப் பற்றி பேசினார். எனக்கு 10 வயது இருக்கும்போது நானும், என் அம்மா வனிதாவும் நடுரோட்டிற்கு வந்துவிட்டோம். நள்ளிரவு 1 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினோம். 10
வயதிலேயே போலீசாருடன் சண்டையிட்டுளேன். சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்துள்ளேன் என்று கூறினார். இந்தப் பிரச்சனை தொடர்பாக ஜோவிகாவுக்கு சிலர் ஆதரவு வந்தாலும் விமர்சனங்களும் அவர் மீது எழுந்துள்ளன.
முன்னதாக ஜோவிகா- விசித்திரா சண்டையின் போது ஜோவிகா விசித்திராவை ஒருமையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“