Advertisment

தவறாக நடந்த தெலுங்கு நடிகர்... பிக் பாஸ் சோகக் கதையில் விசித்ரா கூறியது யார்?

விஜய் டிவியில் கடந்த மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி வெளிப்படையாகப் பேசிய விசித்ரா, அந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

author-image
WebDesk
New Update
actress Vichithra

விசித்ரா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் கடந்த மாதம் நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில், தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றி வெளிப்படையாகப் பேசிய விசித்ரா, அந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் நிறைவடைந்தது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான விசித்ரா, தனக்கு சினிமா துறையில் நடந்த அவலங்களைப் பகிர்ந்துகொண்டது பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் சோக கதையை சொல்லும் டாஸ்க்கில், விசித்திரா தனக்கு சினிமா துறையில் நடந்த அவலங்கள் கூறினார். அதில், தெலுங்கு நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது பற்றியும், அதற்கு யாருமே தனக்குத் துணை நிற்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, விசித்ரா அளித்த பேட்டியில் அந்த தெலுங்கு நடிகர் யார் என்ற கேள்விக்கு விசித்திரா விளக்கம் கொடுத்திருக்கிறார். 

அந்த டாஸ்க்கில், விசித்திரா கூறியதாவது: “முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் நான் நடிக்க ஒப்பந்தமானேன். சூட்டிங்கில் அவரிடம் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். ஆனால் அவர் என்னுடைய பெயரை கூட கேட்காமல் என்னை இரவு ரூமுக்கு வர சொன்னார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ஆனால், நான் அந்த ரூமுக்கு போகவில்லை. அதனால், அந்த நடிகர் ஆட்களை வைத்து இரவு முழுவதும் என்னுடைய ரூமை தட்ட வைத்தார். அதுபோல ஒரு நாள் அந்த சூட்டிங்கில் ஆக்சன் காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கிருந்த சண்டை கலைஞர்கள் என்னை தவறான முறையில் தொட்டார்கள். அது குறித்து நான் மாஸ்டரிடம் சொன்னபோது, அவர் அந்த நபரை அடிக்காமல் என்னை கன்னத்தில் அறைந்து விட்டார். இது குறித்து நடிகர் சங்கத்திடமும் புகார் கொடுத்தேன். அவர்களும் இதை விட்டு வேற வேலையை போய் பாருமா என்று சொல்லிவிட்டார்கள். ஒருவர் கூட என்னோடு நிற்கவில்லை இதனால் தான் நான் நடிப்பிலிருந்து வெளியேறினேன்” என்று விசித்ரா பேசி இருந்தார். 

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா பேசிய இந்த செய்தி, அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதோடு அந்த நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும் தெலுங்கில் வெளியான பாலலடிவி பாசு என்ற திரைப்படத்தில் தான் இந்த மாதிரி பிரச்னை நடந்தது என்றும் அதுபோல அந்த ஸ்டண்ட் மாஸ்டர் ஆர் விஜய் என்றும் விசித்ரா கொடுத்த புகாரை எடுக்க மறுத்த தலைவர் ராதாரவி தான் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து வெளியே வந்த விசித்திராவிடம், அவரிடம் தவறாக நடந்துகொண்ட அந்த நடிகர் யார் என்று ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விசித்திரா விளக்கம் கொடுத்திருக்கிறார்.  “அதில் நான் பிக் பாஸில் சொன்னது மில்லியன் கணக்கான மக்களுக்கு செல்ல வேண்டும் என்று தான் அந்த நிகழ்ச்சியில் நான் பேசினேன். அது பலருக்கு உத்வேகமாக இருக்கும். நான் யார் பெயரையும் அந்த நிகழ்ச்சியில் சொல்லவில்லை.

ஆனால், ரசிகர்கள் அக்கு வேரா ஆணி வேரா தகவலை எடுத்து விட்டனர். ரசிகர்கள் இப்படி எடுப்பார்கள் என்பது எனக்கு தெரியும்... அதனால்தான், நான் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெயர் எதையுமே குறிப்பிடவில்லை. அது நிஜமான விஷயம் தான். என்னுடைய வாழ்க்கையில் இன்னும் கருப்பு புள்ளியாக இருக்கிறது” என்று விசித்திரா கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அந்த நடிகர் பாலகிருஷ்ணா தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போதுதான் விசித்திரா அந்த நடிகரின் பெயரை சொல்லவில்லை. வெளியே வந்த பிறகாவது அதைப் பற்றி கூறலாமே என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vichithra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment