Bigg Boss Tharshan : பிரபல பிக் பாஸ் 3 போட்டியாளர் தர்ஷன், நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சமீபத்தில் தங்கள் உறவை முறித்துக் கொண்டனர். கமிஷனர் அலுவலகத்தில் சனம் கொடுத்த 'நம்பிக்கை மீறல்' வழக்கின் மூலம் இவர்களது பிரச்னை வெளிச்சத்திற்கு வந்தது.
அழகுக்கு அழகு சேர்க்கும் ரகசியம் : நடிகைகளின் ஃபிட்னெஸ் படங்கள்!
இருவரும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை ஒப்புக் கொண்டனர். தர்ஷனுக்கு தான் பண உதவிகள் செய்ததாகவும், ஆனால் அவர் புகழ் பெற்ற பின்னர் மாறிவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார் சனம் ஷெட்டி. இருப்பினும் இருவருக்கும் இடையே அப்படி என்ன தான் நடந்தது என்பது இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக முதன் முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் தர்ஷன், "எந்தவொரு காரணத்திற்காகவும் உறவுகள் தோல்வியடைகின்றன. இரு நபர்களுக்கு இடையேயான உறவில், ஒருவரோ அல்லது இருவரும் மகிழ்ச்சியற்றவர்களாக இருந்தால், விஷயங்கள் மிகவும் கடினமாகிவிடும் முன் இணக்கமான முறையில் பிரிவதே சிறந்தது” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனு
மேலும் தொடர்ந்த தர்ஷன், “அந்த நபர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது, ஆனால் விஷயங்கள் ஆரோக்கியமற்றவையாகி விட்டன, அவர்களால் அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என்னை வேண்டுமென்றே அழிக்கத் தொடங்கின” என்ற தர்ஷன் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்றும், அதனால் அவர் மிகவும் வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் பின்னடைவுகள் நிகழ்கின்றன. ஆனால் நான் இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இப்போதும் எதிர்காலத்திலும் எனது வாழ்க்கையில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளேன். எதுவாக இருந்தாலும் என்னுடன் நின்றவர்களுக்கு மிக்க நன்றி” என உணர்வுப் பூர்வமாக பதிவிட்டுள்ளார் தர்ஷன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.