பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சாச்சனா, கூறிய உண்மை சம்பத்தை வைத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. வழக்கமான தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில், நடிகர் ரஞ்சித், தீபக், அர்னவ், சத்யா, பவித்ரா ஜனனி, வி.ஜே.விஷால், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நானே, ஆண்கள் அணிக்கும் பெண்கள் அணிக்கும் ஏற்பட்ட மோதலில், சாச்சனா தான் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆவதாக சொல்லிவிட்டு முதல் நாளே வெளியேறினார். பிக்பாஸ் வரலாற்றில் 24 மணி நேரத்தில் நடந்த முதல் எலிமினேஷன் என்று பலரும் கூறி வந்த நிலையில், அடுத்து 2 நாட்களில் சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அந்த இரு தினங்களும் யார் யார் என்னென்ன செய்தார்கள் என்பது குறித்து கூறியிருந்தார்.
இந்நிலையில், மற்ற போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் சாச்சனா, தான் கடை ஒன்றில் செயின் திருடியது குறித்து பேசியுள்ளார். ஒரு கடையில் ரூ350 கொடுத்து செயின் வாங்கினேன். ஆனால் அது 2 நாட்களில் தொலைந்துபோய்விட்டது. அதனால் மீண்டும் செயின் வாங்க என்னிடம் காசு இல்லாததால், கடை ஒன்றில் நுழைந்து செயினை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்ககொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்ட ஜாக்குலின் உள்ளிட்ட போட்டியாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
வாங்கியதை தொலைத்துவிட்டு, அந்த செயினை வாங்கிய கடையில் இருந்து எடுத்துக்கொண்டேன் அவ்வளவு தான் என்று சாச்சனா அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 24 மணி நேரத்தில் எலிமினேட் செய்ய கூடாது என்று சாச்சனாவுக்கு ஆதரவாக பேசிய நெட்டிசன்கள் அவர் திரும்பி வந்தவுடன் நடந்துகொண்ட விதத்தை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது இந்த திருட்டு சம்பவத்தை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“