பிச்சையெடுத்துவிடலாம்…ஆனால், தலைகுனிந்து வாழக்கூடாது என பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா கூறியது லாஸ்லியா உள்ளிட்ட பிக்பாஸ் கண்டெஸ்டண்ட்டுகளுக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் பொருந்தக்கூடிய வசனம் தான் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் பரபரப்பாகவும், அதேசமயம் சில இடங்களில் போர் அடிக்கும் விதமாகவும் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில், கவின், லாஸ்லியா, ஷெரின், வனிதா, தர்ஷன், முகென், சாண்டி ஆகியோர் மட்டுமே உள்ளனர். . இவர்களில், தர்ஷன், சாண்டி, கவின், ஷெரின், வனிதா ஆகிய 5 பேர் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியா பேமிலி : லாஸ்லியாவின் இரு சகோதரிகளும், அம்மாவும் முதலில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களைப் பார்த்த லோஸ்லியா ஆனந்த கண்ணீர் வடித்தார். சேரன் இருக்கும் நம்பிக்கையில் தான் இருப்பதாக லாஸ்லியாவின் அம்மா கூறினார். லாஸ்லியாவுக்கு அவரது அம்மா சில அறிவுரைகளையும் வழங்கினார்.
அப்பாவைக் கண்ட லோஸ்லியா அவரது காலில் விழுந்து கதறி அழுதார். லோஸ்லியாவின் அப்பா மட்டுமே கவினை கட்டியணைத்து கை கொடுத்தார். நீ என்ன சொல்லி வந்தாய். உன்னை அப்படியா வளர்த்தேன். தலை குனிந்து வாழக்கூடாது. காறித்துப்புவதை பார்க்க வைத்துவிட்டாய். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே வா. வந்த வேலையை விட்டுவிட்டு என்ன செய்கிறாய். மற்றவர்களுக்கு தலை குனிந்து வாழ வைத்துவிட்டாய். காசு எனக்கு தேவையில்லை. அதற்கு பிச்சையெடுத்துவிட்டு போவேன். வந்த வேலையை மட்டுமே நீ பார்க்க வேண்டும் உள்ளிட்ட பல அறிவுரைகளை லாஸ்லியா, கவின் உள்ளிட்டோருக்கு லாஸ்லியாவின் அப்பா வழங்கினார்.
பிக்பாஸ் வீட்டுக்கு லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்தாலும் வந்தார்கள். நமது நெட்டிசன்களுக்கு செம கண்டெண்ட் கிடைத்தாகிவிட்டது.
நமது நெட்டிசன்களின் டுவிட்டர் பதிவுகள் உங்களுக்காக...