Advertisment

தாய் பாலை திருடி குடித்த பாலிவுட் நடிகர்: மனைவியே சொன்ன தகவல்; காரணம் இதுதானாம்!

குழந்தைக்காக வைத்திருந்த தாய் பாலை தனது கணவர் திருடி குடித்துவிட்டதாக ஆயுஷமான் குராணா மனைவி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ayushman Khurrana

பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக இருக்கும் ஆயுஷ்மான் குராணா தனது ஊட்டச்சத்து தேவைக்காக, மனைவியின் தாய் பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2004-ம் ஆண்டு எம்டிவி ரியாலிட்டி ஷோவின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆயுஷ்மான் குராணா, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறினார். இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், கடந்த 2012-ம் ஆண்டு வெளியான விக்கி டோனர் என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

விந்தனுக்களை தானம் கொடுப்பராக நடித்திருந்த ஆயுஷ்மான் குராணா நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்த நிலையில், சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் வென்றிருந்தார். இந்த படம் தமிழில், தாராள பிரபு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு பல படங்களில் கமிட் ஆன ஆயுஷ்மான் குராணா தற்போது இந்தி சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வருகிறார்,

இவர் நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படம் நெஞ்சுக்கு நீதி என்ற பெயரிலும், அந்தாதூன் படம் அந்தகன் என்ற பெயரிலும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 2012-ம் ஆண்டு, தனது காதலி, தாஹிரா கஷ்யாப்-பை திருமணம் செய்துகொண்ட ஆயுஷ்மான் குராணாவுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். இதில் தாஹிரா காஷ்யப் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார்.

இவர் எழுதிய ஒரு புத்தகத்தில் தனது கணவர் ஆயுஷ்மான் குராணா, தனது ஊட்டச்சத்து தேவைக்காக, தன்னிடம் இருந்து தாய் பாலை திருடி குடித்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு தான் தாயாக இருப்பதன் 7 பாவங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட தாஹிரா காஷ்யப், அதில் தனது கணவர் ஆயுஷ்மான் குராணா ஊட்டச்சத்துக்காக தனது தாய் பாலை திருடி, புரோட்டின் ஹேக்காக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாங்காக் பயணத்தின்போது தனது 7 மாத குழந்தைக்காக பாட்டிலில் எடுத்து வைக்கப்பட்டிருந்த தாய்பாலை எடுத்து வைத்திருந்தேன். அப்போது அந்த பாட்டிலை காணவில்லை. இது குறித்து படுக்கையில் ஓய்வில் இருந்தபோது அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் மீசையை துடைத்துக்கொண்டே சிரித்தார். அந்த பால் சத்தானதாக இருந்ததால் தான் அதை குடித்துவிட்டதாக சொன்னார். அன்றில் இருந்து ஒவ்வொரு பயணத்தன்போது, அவர் பாலை திருடிவிட கூடாது என்பதால் மறைத்து வைத்தேன் என குறிப்பிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment