New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Rakhi.jpg)
ராக்கி சாவந்த், ஆலியாவின் கர்ப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விரைவில் தானும் தாயாக வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக ஆலியா பட் ரன்பீர் கபூர் ஜோடி விரைவில் பெற்றோர் ஆக உள்ளதாக கடந்த ஜூன் 27-ந் தேதி அறிவித்தனர். அன்று முதல் இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராக்கி சாவந்திற்கு இந்த செய்தி உத்வேகம் அளிப்பதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இது தொடர்பாக பேசிய ராக்கி சாவந்த், ஆலியாவின் கர்ப்பம் தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து விரைவில் தானும் தாயாக வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ராக்கி சாவந்த் தனது காதலன் அடில் துரானியுடன் கிளினிக்கிலிருந்து வெளியே வருவதைக் பார்த்த செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது "நான் எப்போது கர்ப்பமாக இருப்பேன்?"
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலுமு் கவலை இல்லை. கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்துகொள்வேன். எல்லோரையும் நன்றாக மாற்றும் ஒரு நலல குழந்தையை நான் பெற்றெடுப்பேன் என்று கூறியுள்ளார்.
அலியா-ரன்பீர் பெற்றோரை மாற்றத் தயாராகிவிட்டார்கள் அவர்கள் விரைவில் தங்கள் பெற்றோராக புதிய பயணத்தைத் தொடங்குவதாக அறிவித்தனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஆலியா தனது சோனோகிராஃபி சோதனை செய்துகொள்வது தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படங்களைப் பகிர்ந்த கொண்ட ஆலியா, “எங்கள் குழந்தை .. விரைவில் (sic)” என்று எழுதினார். இதற்கிடையில், ராக்கி சாவந்த் தனது காதலன் அடில் கான் துரானியுடன் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.