/tamil-ie/media/media_files/uploads/2020/07/New-Project-2020-07-18T201628.778.jpg)
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித், ரசிகர்களால் தல என்று அன்புடன் அழைக்கப்படும் அஜித் தற்போது கொரோனா பொதுமுடக்கத்தால் வீட்டில் இருந்து வருகிறார். அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகிறது.
நடிகர் அஜித் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் மனைவி மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அஜித்தின் ஈஞ்சம்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலை பேசி மூலம் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் அஜித் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். சோதனை யில் வெடிகுண்டு எதுவும் இல்லை வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து, அஜித்தின் வீட்டுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்று போலீசார் விசாரித்ததில், விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. மேலும், இந்த நபர், இதற்கு முன்பு விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.