Advertisment

இங்கு தான் அவருடன் வாழ்வது போல் உணர்கிறேன் : ஸ்ரீதேவி குறித்து மனம் திறந்த போனி கபூர்

ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பிறகு அவரது சென்னை வீட்டைப் புதுப்பிப்பது குறித்து மனம் திறந்து பேசிய போனி கபூர், அந்த வீட்டில் நேரத்தை செலவிட விரும்புவதாகவும், ஏனெனில் அங்குதான் ஸ்ரீதேவியுடன் வாழ்வது போல் உணர்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sridevi Home

நடிகை ஸ்ரீதேவி சென்னை வீடு

ஆங்கிலத்தில் படிக்க...

Advertisment

தனது மனைவியும், முன்னணி நடிகையுமாக இருந்த ஸ்ரீதேவியுடன் வாழ்ந்த நினைவுகளை பற்றி மனம் திறந்த தயாரிப்பாளர் போனி கபூர் சென்னை வீடு செல்லும்போதெல்லாம் ஸ்ரீதேவியுடன் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்த நடிகை ஸ்ரீதேவி, ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு நடிப்பின் உச்சத்தில் இருந்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். அவரது மரணம் இந்திய சினிமாவில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளதாக பலரும் குறியிருந்தனர். இதனிடையே மறைந்த தனது மனைவி ஸ்ரீதேவிக்காக அவருடன் வாழ்ந்த இந்த சென்னை வீட்டை தான் புதுப்பித்து வருவதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஸ்ரீதேவியுடன் வாழ்ந்த நினைவுகளுக்காக சென்னையில் உள்ள வீட்டை புதுப்பிக்க வேண்டும் என்று யோசித்தேன். ஒரு காலத்தில் அங்கு எனது சகோதரர் அனில் கபூர் மற்றும் எனது பெற்றோருக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் இப்போது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஜான்வியும் குஷியும் ஆரம்பத்தில் சென்னை வீட்டிற்கு அடிக்கடி வரவில்லை.

இந்த வீடு என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. மகள்கள் அடிக்கடி வந்து இங்கு தங்க வேண்டும் என்பதற்காக முழு வீட்டையும் புதுப்பித்தேன். ஸ்ரீதேவி இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு கூட, மகள்கள் சென்னைக்கு பயணம் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை, ஏனென்றால் அவர்கள் மும்பையில் வளர்ந்தார்கள் என்பதால் இங்கு அவர்களுக்கு நண்பர்கள் இல்லை. சமீப காலம் வரை எங்கள் சென்னை வீடு அதிகம் பயன்படுத்தப்படவில்லை

ஒரு சில அறைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, எங்கள் அறை பயன்படுத்தப்பட்டது, ஆனால் மீதமுள்ள அறைகள் பூட்டப்பட்டிருந்தன. அறைகள் பூட்டப்பட்டிருந்தால், அவை ஈரப்பதத்தால் கெட்டுப்போகும், எனவே முழு வீட்டையும் மீண்டும் செய்ய வேண்டியிருந்தது. தரை தளம் நன்றாக இருந்தது. ஆனால் முதல் தளம் மற்றும் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகள் புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. ஸ்ரீயும் நானும் அனில், சஞ்சய், எங்கள் சகோதரி மற்றும் எங்கள் பெற்றோருக்காக கெஸ்ட் பிளாக் செய்தோம்.

அறைகள் அனைத்தும் இன்னும் உள்ளன, ஆனால் இப்போது குஷி மற்றும் ஜான்விக்கு சொந்தமாக உள்ளது. தற்போது சென்னை வீட்டுக்குச் செல்லும் போது, ஸ்ரீதேவியுடன் வாழ்வது போல் உணர்கிறேன். "திருமணத்திற்கு முன்பும் கூட, நான் அவருடன் பழகும்போது, நான் அவரை எங்கே உட்கார்ந்து பார்த்தேன் என்பது எனக்கு மிகவும் இனிமையான நினைவுகள் உள்ளன. அவரை சந்தித்த அதிர்வுகள் இன்னும் என்னுள் உள்ளன, ”என்று போனி கபூர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

கடந்த ஆண்டு, வோக் இந்தியாவுக்கான வீடியோவில், ஜான்வி கபூர் ரசிகர்களுக்காக சென்னை வீட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த வீடியோவில் தனது படுக்கையறையைக் காட்டிய அவர், தனது பெற்றோரின் ரகசியத் திருமணபடங்களைக் கொண்ட நினைவுச் சுவரைகாட்டினார். இது அம்மா அப்பா திருமண புகைப்படங்கள். இது ஒருவித ரகசிய திருமணம் என்று நான் நினைக்கிறேன், அதனால்தான் அவர்கள் போட்டோவில் மிகவும் அழுத்தமாக இருப்பதாகத் தெரிகிறது. நான்அதை சொல்லலாமா வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ”என்று கூறியிருந்தார்.

சமீபத்திய நேர்காணலில், போனி கபூர் 1996 ஆம் ஆண்டில் ஸ்ரீதேவியுடன் உண்மையில் திருமணம் நடந்ததாகவும், அவர்கள் 1997 ஆம் ஆண்டில் ஸ்ரீதேவி தான் கர்ப்பமாக இருந்தபோது தான் தங்கள் திருமணத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தியதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sridevi Boney Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment