/indian-express-tamil/media/media_files/2025/10/05/dhanush-kidai-vetti-virundhu-2025-10-05-17-08-44.jpg)
'இட்லி கடை' படத்திற்கு கிடைத்த வரவேற்பு: சொந்த ஊரில் கிடா வெட்டி விருந்தளிந்த தனுஷ்!
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான "இட்லிக் கடை", திரையரங்குகளில் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, அதன் வெற்றிக்காகத் தனது குலதெய்வம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கிடா வெட்டி விருந்தளித்துள்ளார்.
அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் வெளியான 'இட்லிக் கடை' திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மெனனும், வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து தன் கிராமத்துக்குத் திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதைக்களத்தை இப்படம் கொண்டிருந்தது. குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்திருந்ததால், படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, 'பலரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்' என்று திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, 'ராயன்' படத்தைத் தொடர்ந்து இயக்குநராகவும் தனுஷ் இப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் இதுவரை ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இந்த வெற்றியைச் சிறப்பிக்கும் விதமாக, தனுஷ் தனது குலதெய்வம் அமைந்துள்ள தேனி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் ஊர்க்காரர்களுக்குப் பிரம்மாண்டமான விருந்தளித்துள்ளார்.
நேற்று (அக்.4) தன் குடும்பத்தினருடன் தேனி சென்ற நடிகர் தனுஷ், குலதெய்வ வழிபாட்டை முடித்த பின்னர், இன்று (அக்.5) கிடா வெட்டி ஊர் மக்களுக்கு விருந்து பரிமாறினார். இந்த வெற்றி விருந்து தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.