செக்கச் சிவந்த வானம் இரண்டாவது டிரைலர் : 'மணிரத்னம் ஈஸ் டெரர் பேக்' என்று தான் ரசிகர்கள் அவரை அழைக்கிறார்கள், செக்கச் சிவந்த வானம் டிரைலரை பார்த்த பிறகு. கடல், காற்று வெளியிடை என்று காற்று வாங்கிய மணிரத்னத்தின் படங்களைப் பார்த்து சோர்ந்து போயிருந்த அவரது ரசிகர்களுக்கும் சரி... மணிரத்னம் படமா.. என்று சலனமே இல்லாமல் கடந்து போவோருக்கும் சரி.. செக்கச் சிவந்த வானம் ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் என்றே சொல்லலாம்.
விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், தியாகராஜன் என்று ரசிகர்களை கட்டியிழுக்கும் பவர்ஃபுல்லான ஆர்ட்டிஸ்ட்களை ஒரே படத்தில் ஒன்றிணைத்த விஷயத்திலேயே மணி சார் வெற்றிப் பெற்றுவிட்டார் என்று சொல்லலாம். இன்னும் படம் மட்டும் தான் பாக்கி.
கதையில் ஒன்னும் பெரிய குழப்பமெல்லாம் நமக்கு இல்லை. பிரகாஷ் ராஜ் குடும்பத் தலைவர். பணம், அதிகாரம், செல்வாக்கு மிக்கவர். அவரின் மூன்று பிள்ளைகளான அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்புவிற்கு இடையே அந்த அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி. இதற்கு இடையில் போலீசாக வரும் விஜய் சேதுபதி.
அதிகாரத்தைக் கைப்பற்ற மூவரும் போட்டிப் போட, அவர்களை அவர்களுக்கே தெரியாமல் தட்டித் தூக்கும் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி வருகிறார் என்று கூறப்படுகிறது. எது எப்படியோ... வரும் 27ம் தேதி படம் ரிலீசானவுடன் பதில் தெரிந்துவிடும்.
செக்கச் சிவந்த வானம் இரண்டாவது டிரைலர்
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரைலரையே இன்ச் இன்ச்சாக ரசிக்கலாம் போல.. அப்படி இருக்கிறது. போதாத குறைக்கு ரஹ்மான் வேற இசையில் விளையாடி இருக்கிறார்.
ஆக மொத்தம், மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானத்துக்காக ரசிகர்கள் மாஸ் வெயிட்டிங்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.