நடிகையும், ஆந்திய சட்டமன்ற உறுப்பினருமான ரோஜாவின் கணவரும் பிரபல இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி, மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மற்றும் எம்பியுமான அன்பரசுவின் மகன், அருள் அன்பரசு ஆகிய இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குநர் ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவரும், கடந்த 2016-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த திரைப்பட நிதியாளர் முகன்சந்த் போத்ராக்கு எதிரான பல அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பேட்டியில், நடிகை ரோஜாவுக்கு கடன் வழங்கியது, அவரது வணிகம் தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் பொதுமக்கள் முன்னிலையில் தனது தற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் விதமான உள்ளதாக கூறிய முகன்சந்த் போத்ராக்கு அவர்கள் இருவரும் தன் மீது அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கடந்த 2017-ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே போத்ரா மரணமடைந்து விடடார்.
இதனைத் தொடர்ந்து அவரது மகன் ககன்சந்த் இந்த வழக்கை எதிர்த்துப் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஆர்கே செல்வமணி மற்றும் அருள் அன்பரசு ஆகிய இருவரும், ஏப்ரல் 4-ந் தேதி ஜார்ஜ் டவுனில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில், அவர்களின் வழக்கறிஞர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதன் காரணாக ஆர்.கே.செல்வமணி மற்றும் அன்பரசன் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்த மாஜிஸ்திரேட் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 அன்று ஒத்திவைத்து்ளளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil