2003-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. வரும் டிசம்பர் 22-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மொத்தம் 30 படங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றிலிருந்து, ஆதார், இரவின் நிழல், இறுதிப் பக்கம், மாமனிதன், கார்கி, கசட தபற, நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, பிகினிங், கோட், பபூன், யுத்த காண்டம் ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.