'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படத்தின் கதாநாயகி, திரையுலகை விட்டு விலகியதன் பின்னணி!

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்ல இருந்த நேரத்தில், திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. முதல் படமே சக்ஸான நிலையில் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திரைப்படத்தை விலகிய ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்ல இருந்த நேரத்தில், திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. முதல் படமே சக்ஸான நிலையில் பின்னர் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திரைப்படத்தை விலகிய ஒரு நடிகை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
narmadha

1980-களில் 'சின்ன பூவே மெல்ல பேசு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை நர்மதா, ஒரு சில படங்களுக்குப் பிறகு ஏன் திரையுலகை விட்டு விலகினார் என்பது பலருக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில் அவர் குறித்த தகவல்கள் நியூஸ் மிக்ஸ் டிவி யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. தற்போது, அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

Advertisment

1969-ல் சென்னையில் பிறந்த நர்மதா, சிறு வயதிலிருந்தே கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இசையைக் கேட்டவுடன் நடனமாடும் அவரது ஆற்றலை உணர்ந்த அவரது பெற்றோர், அவருக்கு முறையான நடனப் பயிற்சி அளித்தனர். பள்ளிக் கல்வி மற்றும் கலை நிகழ்ச்சிகள் இரண்டிலும் அவர் சிறந்து விளங்கினார்.

உயர்நிலைப் பள்ளியை முடித்தவுடன், ராபர்ட் மற்றும் ராஜசேகர் இயக்கிய 'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில், நடிகர் ராம்க்கிக்கு ஜோடியாக 'ரேகா' என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். முதலில் பணத்திமிர் கொண்ட கல்லூரி மாணவியாகத் தோன்றி, பின்னர் காதலியாக மாறும் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றி, நர்மதாவுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகத் தோன்றியது.

'சின்ன பூவே மெல்ல பேசு' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், நர்மதா அதே படத்துடன் திரையுலகிலிருந்து விலகினார். சரியான அங்கீகாரம் கிடைக்காதது மற்றும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாதது ஆகியவை அவரது இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன்பின்னர், அவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை மணந்து, திரைப்பட வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார். இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். தற்போது அவர் கலைத் துறையுடன் எந்த தொடர்பும் இல்லாமல், சமூக வலைதளங்களில் இருந்து விலகி, தனது குடும்பத்துடன் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். 

Advertisment
Advertisements

‘சின்ன பூவே மெல்ல பேசு’ மாபெரும் வெற்றி பெற்ற போதிலும், நர்மதா அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை. சரியான அங்கீகாரம் கிடைக்காதது மற்றும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாதது ஆகியவை அவர் திரையுலகை விட்டு விலக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்பட்ட நர்மதா, தனது விருப்பத்தின் பேரில் திரையுலகிலிருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். 

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: