பிரபல நடன இயக்குனர் பாபி, சூர்யாவுக்கு காதல் கடிதம் எழுதிய சுவாரஸ்யமான சம்பவத்தை ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியின் போது கூறியுள்ளார்.
சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவும், ஜோதிகாவும் திருமணம் செய்து மும்பையில் செட்டிலாகி விடுவார்கள். அப்போது இருவரும் ஆஃபிசுக்கு டிரெயினில் செல்லும் போது, கல்லூரி படிக்கும் இளம்பெண் ஒருத்தி, சூர்யாவிடம் சென்று ப்ரோபஸ் செய்வாள். அப்போது சூர்யா எனக்கு ஒகே தான் ஆனா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என அந்த பெண்களிடம் கலாய்த்து கொண்டிருப்பார். அதேமாதிரி ஒரு மாதிரி சம்பவம் சூர்யா, ஜோதிகா நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் நடன இயக்குனர் பாபி. இவர் பிரபல கொரியாகிராஃபர் பிருந்தாவின் அசிஸ்டெண்டும் கூட. பாபி, தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டிதான், இப்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பேட்டியின் போது, பாபி தான் சூர்யாவுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்த சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அப்போது தொகுப்பாளர் ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பா அல்லது பிறகா எனக் கேட்கிறார்.
அதற்கு பதிலளித்த பாபி; நேருக்கு நேர் படத்தில் சிம்ரனும், சூர்யாவும் நடித்திருப்பார்கள். எனக்கு பிடித்த ஹீரோயின் சிம்ரன். அவங்க ஸ்டைல், ஆட்டிடியூட், டிரெஸிங் எல்லாமே பார்த்து சிம்ரனை பிடித்துவிட்டது. எனக்கு பள்ளிப் படிக்கும் போதிலிருந்தே சூர்யாவை ரொம்ப பிடிக்கும்.
காக்க காக்க படத்தில் பிருந்தா மாஸ்டருக்கு அசிஸ்டெண்டாக பாபி இருந்துள்ளார். அவர் கூறுகையில்; காக்க காக்க படத்தின் போது எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. என்னைக் கொஞ்சம் மாற்றி பாடலில் சூர்யாவும், ஜோதிகாவும் ஜீப்பில் வரும் சீன் ஷூட்டிங் ஈசிஆர் சாலையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பேப்பரில் சூர்யா நீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்கள காதலிக்கிறேன் என்று எழுதி, சூர்யாவிடம் சென்று உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று கூறினேன்.
அதற்கு சூர்யா; சொல்லுங்க பாபி என்ன விஷயம் என கேட்டார்.
அப்போது நான் அவரிடம் லட்டரை நீட்டினேன். இதில் என்ன இருக்கிறது என சூர்யா கேட்க, நான் உங்கள காதலிக்கிறேன் என சொன்னேன். அதைக்கேட்டு சூர்யா, அங்கிருந்த கேமரா மேன், ஜோதிகா, பிருந்தா மாஸ்டர் அனைவரும் ஒரு நிமிஷம் திகைத்து விட்டனர். அப்போது சூர்யா சாரி பாபி, நான் ஜோதிகாவ லவ் பண்றேன் என சிரித்தபடியே கூறினார்.
அப்போது ஜோதிகா, என்ன பாபி கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்கலாம் ல. என்று கேட்க, அதற்கு பாபி. இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை. நான் சூர்யாவை காதலிக்கிறேன்.. நீங்க வந்துடுங்க என்று விளையாட்டாக கூறியிருக்கிறார்.
இப்போது பாபி மாஸ்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “