தமிழ் சினிமாவில், ஒரு சில படங்களில் கொடூர வில்லனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு உருமாறியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
1978-ம் ஆண்டு ப்ரானம் கரேடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். தொடர்ந்து தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்த இவர், 2002-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாக சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கொடூர வில்லன் கேரக்டர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தமிழில் அவருக்கான ரசிகர்களை அதிகரித்தது,
அதனைத் தொடர்ந்து, குத்து, திருப்பாச்சி, பரமசிவன், கொக்கி, கோ, மம்பட்டியான், உள்ளிட்ட சில படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்துள்ள கோட்டா ஸ்ரீனிவாச ராவ், ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட சில படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில தமிழ் படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் மிகவும் மதிக்கப்படும் நடிகராக வலம் வரும் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் சமீப காலமாக திரையுலகில் இருந்து விலகியுள்ள நிலையில், கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான சுவர்ண சுந்தரி என்ற படத்தில் நடித்திருந்தார். வயது முதிர்வு காரணமாக அவர் தற்போது உடல்நலக் குறைபாடுகள் மற்றும் இயக்கம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வருவதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/06/12/kota-srinivasaro-919107.jpg)
சமீபத்தில், பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் அவரை சந்தித்து ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த புகைப்படததில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் காலில் கட்டு போடப்பட்டுள்ளது. மற்றொரு கால் மிகவும் பலவீனமாக இருப்பது படத்தில் தெரிகிறது, இது அவரது உடல்நிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு குறித்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடமிருந்து பரவலான கவலையைத் தூண்டியுள்ளது.