/indian-express-tamil/media/media_files/kCaRwz74VAHSQknJ29sS.jpg)
சந்தியா சீரியல்
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் தமிழில் வெளியாகி வரும் முக்கிய சீரியல் சந்தியா. இந்த சீரியல் தற்போது கடைசி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சந்தியா க்ளைமாக்ஸை 2023 ஆம் ஆண்டின் கடைசி வாரத்தில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.
பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திகில் மற்றும் மர்மம் கலந்த இந்த சீரியலில், தீபிகா சிங் கோயல், நமிக் பால் மற்றும் வின் ராணா ஆகியோர் சந்தியா, அஷ்வந்த் மற்றும் கமல் ஆகிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பாபு என்ற தீய சக்தியால் பிரேம் தொடர்ந்து வேட்டையாடப்படுகிறார். பிரேம் ஒரு மனிதர், சந்தியா மற்றும் கமல் ஒரு ஆவியின் இணைப்பின் மூலம் பிறந்த குழந்தை என்பதால், அவருக்கு சிறப்பு சக்திகள் இருக்க வேண்டும்.
ஆனால் இது ஒரு தந்திரி பாபுவைத் தவிர யாருக்கும் தெரியாது, அவர் தனது உடலைக் கைப்பற்றி அழிக்க முடியாத ஒரு சக்தியா மாற விரும்பி, சந்தியாவிடம் தன் மகனைக் கொடுக்கும்படி வற்புறுத்த அவன் ஆவியை அனுப்புகிறான். பாபு அனுப்பிய ஒவ்வொரு ஆவியையும் சந்தியாவும் அஷ்வந்தும் தோற்கடிப்பார்களா? என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.