Advertisment

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு: திரையுலகினர் இரங்கல்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

author-image
WebDesk
New Update
Bonda Mani.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே சிறுநீரகப் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திரையுலகினர் பண உதவி செய்தனர்.  

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு (டிச.23) 11.30 மணியளவில் வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் அவரை உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

போண்டா மணி, 1991-ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 

தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment