மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள், வசனங்கள்... கே.பி.ஒய் பாலா மீது சென்னை கமிஷனரிடம் பரபர புகார்!

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
bala

சின்னத்திரை நகைச்சுவை நடிகர் கே.பி.ஒய். பாலா, 'காந்தி கண்ணாடி' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஷெரீப் இயக்கிய இந்த திரைப்படம், செப்டம்பர் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Advertisment

இந்தப் படத்தில் பிரதமர் மோடியை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருப்பதாகக் கூறி, சிவசேனா கட்சியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் மூலம் 'காந்தி கண்ணாடி' திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், படத்தின் இயக்குனர் ஷெரீப், நடிகர் கே.பி.ஒய். பாலா மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடியை அவமதித்ததற்காக, படத்தின் இயக்குநர் ஷெரீப், கதாநாயகன் கே.பி.ஒய். பாலா மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் சிவசேனா அமைப்பினர் தங்கள் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் படத்தின் கதை பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. தன் மனைவியின் 60-வது திருமணத்தை கொண்டாட ஆசைப்படும் ஒரு முதியவர், தனது நிலத்தை விற்று ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்கும்போது பணமதிப்பிழப்பு அறிவிப்பு வருகிறது. இதனால் அவர் எதிர்கொள்ளும் சவால்களே இப்படத்தின் கதைக்கரு. ஒருபுறம் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், மறுபுறம் அரசியல் ரீதியிலான சர்ச்சையை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற கே.பி.ஒய். பாலா, 'காந்தி கண்ணாடி' திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து கௌரவத் தோற்றத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் சிங்கம் புலி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

KPY Bala

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: