வைல்டு கார்டு போட்டியாளரான அன்னபாரதி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்ற வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வீட்டுக்குள் சென்றார்கள். இதற்கு முன்பாக சென்ற போட்டியாளர்களுக்கும், இவர்களுக்கும் சென்ற வாரம் முழுவதுமாக மோதல் போக்கு சென்று கொண்டிருந்தது. கூல் சுரேஷ், பிரதீப் மோதலும் அதிக கவனம் பெற்றது. தான் பேசியதற்கு பிரதீப் மனிப்பு கேட்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில் வார இறுதியில் அனைவரும் ஐஷுதான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்தனர், ஆனால் எதிர்பாராத விதமாக வைட்டு கார்டு போட்டியாளர் அன்னபாரதி வெளியேறினார். மேலும் போட்டியாளர் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த செயலால் நெறியாளர் கமலை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் ஞாயிற்றுகிழமை எபிசோடில் கமல், ஸ்வீட் லட்டு, கசப்பான அல்வா என்ற டாஸ்கை ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தார். இதில் அர்ச்சனா ஸ்வீட் லட்டுவை விஷ்ணுவுக்கும், கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் கொடுத்தனர். தினேஷ் ஸ்வீட் லட்டுவை, கூல் சுரேஷுக்கும் கசப்பான அல்வாவை மாயா, பூர்ணிமாவுக்கும் வழங்கினார். இவர்கள் இருவரும்தான் அதிகமான கசப்பான அல்வாவை பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“