/indian-express-tamil/media/media_files/pe40tT6OdsIBzLKlRCGw.jpg)
பிரியங்கா - மாதம்பட்டி ரங்கராஜ்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முந்தைய சீசனிகளில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக நடுவராக வந்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தான் இந்த நிகழ்ச்சிக்கு எப்படி வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 27-ந் தேதி முதல் 5-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க, செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் நிகழ்ச்சியை தயாரித்து வந்த நிறுவனமும் அதில் இருந்து விலகிக்கொண்டது. இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், சமீபத்தில் இதற்கான ப்ரமோ வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதில் வெங்கடேஷ் பட்க்கு பதிலான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்த வி.ஜே. பிரியங்கா, இந்த கோமாளிகளை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் உங்களை எப்படி சார் கன்வின்ஸ் பண்ணாங்க என்று மாதம்பட்டி ரங்கராஜனிடம் கேட்டார். அவரோ நீங்க வரிங்கனு சொன்னாங்க அதான் கன்வின்ஸ் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார். கோவையை சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜன், மாதம்பட்டி பாஜஷாலா என்ற கேட்ரிங் தொழிலை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தொடங்கி, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பலரும் இவரது சமையலை ருசித்துள்ளனர். திருமண நிகழ்ச்சியில் இல்லாத நேரங்களில் படங்களில் நடித்து வரும் இவர், இதற்கு முன்பு மெகந்தி சர்க்கஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.