குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசனில் முதல் நாளே, பிக்பாஸ் சௌந்தர்யா, பிரச்னையை தொடங்கியுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குக் வித் கோமாளி என்றாலே குதூகலமும், சுவையான சமையலும் நினைவுக்கு வரும். விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் குக் வித் கோமாளி இதுவரை 5 சீசன்கள் வெற்றிகராமாக முடித்நத்ளளது, சமையல் திறமை உள்ள போட்டியாளர்களையும், அவர்களைத் தங்கள் நகைச்சுவையால் திணறடிக்கும் கோமாளிகளையும் ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகத் இருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் புதுப்புது சமையல் சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்திருக்கும். போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் பொருட்களை வைத்து சுவையான உணவுகளை சமைக்கப் போராடும்போது, கோமாளிகள் செய்யும் அட்டகாசங்கள் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். முதல் 4 சீசனிகளில், செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 5-வது சீசனில் வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து செஃப் தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக இணைந்தார்.
இதனிடையே நேற்று (மார்ச் 4) தொடங்கிய குக் வித் கோமாளி 6-வது சீசனில், செஃப் தாமு, மாதம்பட்டி ரங்ராஜ் ஆகியோருடன், 3-வது நடுவராக கௌசிக் சங்கர் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஷபானா ஷாஜன். லட்சுமிராமகிருஷ்ணன், பிரியா ராமன் மற்றும் உமைர் இப்னு லத்தீப், நடிகர் கஞ்சா கருப்பு, பிக்பாஸ் ராஜூ ஆகியோர் போட்டியாளர்களாகவும், புகழ், சரத், ராமர், சுனிதா கோகோய் ஆகியோருடன் புதிய கோமாளிகளான சௌந்தர்யா நஞ்சுண்டன், சர்ஜின் குமார், பூவையார், டாலி மற்றும் குரைஷி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, நடிகர் கஞ்சா கருப்புவுக்கு கோமாளியாக பிக்பாஸ் சௌந்தர்யா பங்பேற்றிருந்தார். அப்போது கஞ்சா கருப்பு செய்யும் சமையலை பார்த்து தொடர்ந்து கிண்டல் செய்துகொண்டே இருக்க, அங்கே வந்த நடுவர் கௌசிக் சங்கர், இதில் யார் குக் யார் கோமாளி என்று கேட்க, நானும் குக் தான். அப்படி சொல்லித்தான் வர சொன்னார்கள் என்று செள்நதர்யா சண்டைக்கு சென்றுள்ளார். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் சுனிதாவும் செளந்தர்யாவும் சண்டைபோடும் எபிசோடுக்காக காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.