தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா; எண்ணிக்கை 621 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

சென்னையைச் சேர்ந்த 57 வயதுமிக்க பெண் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை பலியானார்

சென்னையைச் சேர்ந்த 57 வயதுமிக்க பெண் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை பலியானார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
corona virus in tamil nadu increased 621 and 50 new cases beela rajesh

Corona virus in India

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசிய போது, "தமிழகத்தில் இதுவரை வீட்டில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 91,851. 205 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடிந்தவர்கள் 19,060. இதுவரை 5,016 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

உடனடி ஊரடங்கு பண மதிப்பிழப்பு போல உள்ளது: மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்

Advertisment
Advertisements

அதில், 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு புதிதாக 50 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தில்லி சென்று திரும்பியவர்களுடன் தொடர்பில் இருந்தோர் எண்ணிக்கை 48. மீதமுள்ள இருவர் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது.

சென்னையைச் சேர்ந்த 57 வயதுமிக்க பெண் ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை பலியானார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திருச்சிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது, யார்யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து கண்டறியப்பட்டு வருகிறது" என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: