/indian-express-tamil/media/media_files/2024/11/27/9HV4PTMco7OHwemwisPm.jpg)
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.
இதன் விளைவாக தங்கள் திருமண வாழ்வை முடித்துக் கொள்ளும் வகையில், பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான விசாரணையில் மூன்று முறை இவர்கள் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 21-ஆம் தேதி நடந்த விசாரணையில், ஆஜரான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர்.
அதன்பேரில், இந்த வழக்கிற்கு இன்று (நவ 27) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இவர்கள் திருமணம் ரத்து செய்யப்பட்டு விவாகரத்து வழங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.