/indian-express-tamil/media/media_files/qioaTqaDTNB2dm3SJQPC.jpg)
இறுதிப் போட்டிக்கு முன்னதாக, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 கோப்பையுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலியாவின் கேப்டன் பாட் கம்மின்ஸ்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கோப்பையை வெல்வது மட்டுமல்லாமல் பல்வேறு சாதனைகளை படைக்க முடியும.
ஆங்கிலத்தில் படிக்க : Cricket World Cup: Not just the Cup, India can win a lot more by beating Australia today
கடந்த அக்டோபர் 05-ந் தேதி இந்தியாவில் தொடங்கிய உலககோப்பை கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்றது. இதில் லீக் மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியா 3-வது முறையாக உலககோப்பை வெல்லும் என்று எதிபார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியம், இந்திய கிரிக்கெட்டின் உலகளாவிய ஆதிக்க தருணத்தை அமைத்து கொடுத்துள்ளது என்று சொல்லலாம். உலக கிரிக்கெட்டில் இதுவரை 5 முறை உலககோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியாவை இந்தியா இன்று வீழ்த்தினால், தொடரை நடத்தும் இந்தியாவுக்கு பெரிய கௌரவமாக அமையும்.
இந்திய கிரிக்கெட்டில் நிர்வாக மற்றும் நிதி வலிமை இருந்தாலும், 2011-ம் ஆண்டு உலககோப்பை தொடருக்கு பின் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி தொடர்களையும் வென்றதில்லை. 2011-க்கு ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியுடன் மோதிய இந்திய அணி 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதனிடையே இன்றைய உலககோப்பை இறுதிப்போட்டி இந்தியாவில் நடப்பது இந்திய அணிக்கு கூடுதல் சாதகமாக அமையும்.
உலகின் மிக பெரிய ஸ்டேடியம் என்ற பெருமையை பெற்றுள்ள அகமதாபத் நரேந்திரமோடி ஸ்டேடியம், கேலரிகள் பல நட்சத்திரங்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போல், இன்றைய ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். மேலும் இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் ஏரோபாட்டிக்ஸ் குழுவின் ஜெட் விமானங்கள் டாஸ் முடிந்தவுடன் அரங்கின் மேல் புரட்டப்படும். விளையாட்டின் ஒவ்வொரு இடைவேளையும் பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் நிகழ்த்துவார்கள். மேலும் மைதானத்தின் மேற்கூரையில், லேசர் ஷோவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
உலககோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வென்ற கேப்டன்கள் அழைத்து கௌரவிக்கப்பட உள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானைத் தவிர மற்ற அணிகளின் கேப்டன்கள் சாம்பியன்களின் அணிவகுப்பு மற்றும் விமானக் காட்சிக்குப் பிறகு அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். இதேபோல் அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை கேப்டன் சாம்பியன் அணிவகுப்பில் ரோகித் சர்மா அல்லது பேட் கம்மின்ஸ் பங்கேற்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உலகளவில் இந்த போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய ரசிகர்களின் மிகவும் பரபரப்பான மற்றும் குங்-ஹோவில் கூட, 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மற்றும் ரசிகர்களின் கூட்டத்தை அமைதிப்படுத்துவதே எங்களின் முதல் இலக்கு என்று ஆஸஸ்திரேலியா அணியின் பாட் கம்மின்ஸ் கூறியுள்ளார். இதுவே அவர்களின் மனதில் மறைந்திருக்கும் பயம் என்று சொல்லலாம்.
உலகக் கோப்பைகளில் பல ஆண்டுகளாக, ஆஸ்திரேலியா அணியை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்து செல்ல பல தனி வீரர்கள் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, முதல் ஒரு மணி நேரம் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி அசத்தியது. வேகப்பந்து வீச்சாளர்கள் தாக்குதல், ஃபீல்டர்கள் டைவிங், ஃபிஸ்ட்-பம்ப் என தென்ஆப்பிரிக்க வீரர்களை நிலைகுலைய வைத்தனர்.
ஆனாலும் இறுதியில் தென்ஆப்பிரிக்க 200 ரன்களை தாண்டினாலும், ஆஸ்திரேலியா இறுதிக்கட்டத்தில் சேசிங் செய்து அசத்தியது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், தனது கடைசி உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடுகிறார், நெருக்கடியான சூழ்நிலைகளில் எப்போதும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் கேப்டன் கம்மின்ஸ் அல்லது இதுவரை அதிகம் செய்யாத ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய சீமர்களை வீழ்த்த முயற்சிப்பார்கள்.
நாக் அவுட் போட்டிகளில் எப்படி வெல்ல வேண்டும் என்ற யுக்தி தெரிந்த ஆஸ்திரேலியா அணி, இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் அந்த யுக்தியை கையாளும் என்று சொல்லலாம். போட்டிக்கு முந்தைய நாள் பேசிய கம்மின்ஸ் “எங்கள் அணியில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு வடிவில் உலகக் கோப்பையை வென்றுள்ளனர். எனவே அதற்கு என்ன தேவை என்பது எங்களுக்குத் தெரியும். அந்த உணர்வை களத்தில் கொண்டு செல்வோம். இந்த ஆண்டு பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இறுதிப் போட்டியில் இருந்து ஆஷஸ் தொடரை தக்கவைத்துக் கொள்வது வரை. அணியில் உள்ள மன உறுதி அபாரமானது, நம்பமுடியாத ஆண்டை நிறைவு செய்யும் நிலையில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதை நம்ப முடியாத கேப்டன் ரோகித் ஷர்மா, அந்த பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய துணிச்சலுக்கான பதிலடி கொடுக்க இந்தியா நிச்சயம் தங்கள் யுக்தியை பயன்படுத்த வேண்டும். இது குறித்து ரோகித் கூறுகையில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் செல்வேன் என்று நான் நினைக்கவில்லை. நீங்கள் விரும்பினால், நினைத்தால் காரியங்கள் பெரிதாக நடக்கும்.
டிரஸ்ஸிங் அறையில் சில பதட்டமான முகங்களைக் கண்டேன். "அழகாகவும் சமநிலையாகவும் இருப்பது சிறந்தது. இதே உணர்வை மற்ற வீரர்களிடமிருந்தும் உணர்கிறேன். மேலும், சற்று பதட்டமான முகங்கள் இயல்பானவை. அதனால்தான் பல்வேறு வகையான உணர்ச்சிகளைப் பார்க்கும்போது விளையாட்டு உற்சாகமாக இருக்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அதன் ஈர்ப்பு விசையை அகற்றும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ள ரோகித் சர்மா, எவ்வித பதட்டமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கிறார்.
"நைஸ் அண்ட் பேலன்ஸ்டு" என்பது போட்டிக்கு முந்தைய நாள் ரோகித் அதிகம் பயன்படுத்திய வார்த்தையாக உள்ளது. உலகக் கோப்பையை வெல்வது ஒரு நல்ல விஷயம், ஏனென்றால் நாங்கள் கடினமாக உழைத்தோம், ஆனால் நாங்கள் உற்சாகமாக இருக்க விரும்பவில்லை, வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உலகக் கோப்பை வெற்றியை அனுபவிக்கவில்லை, 2007 அவர் இந்திய அணியை வழிநடத்தியபோது லீக் சுற்றிலேயே இந்திய தோல்வியடைந்தது. அதனால் இந்த உலககோப்பை அவருக்கு ஒரு வகையான மீட்பு என்று ரோகித் சர்மா கருதுகிறார். நிதானமாக, புத்திசாலித்தனமாக, கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத வகையில், ரோகித் சர்மாவை ஆதரித்து, அணியை மிகுந்த உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் கடின உழைப்பை டிராவிட் செய்துள்ளார்.
டிராவிட் பற்றி ரோஹித் கூறுகையில், "பெரிய பாத்திரம்". "கிரிக்கெட்டின் பிராண்டைப் பற்றி நான் யோசிப்பது ஒன்றுதான் ஆனால் பயிற்சியாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால்... ராகுல் பாய் கிரிக்கெட் விளையாடிய விதமும் நான் விளையாடும் விதமும் முற்றிலும் மாறுபட்டது, ஆனால் அவர் என்னையும் வீரர்களையும் ஆதரித்தார். நான் மற்றும் ராகுல் பாய் அணிக்கு அனுப்பிய செய்தி மற்றும் அவர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ... இந்த உலகக் கோப்பையில் நாங்கள் விளையாட விரும்பிய கிரிக்கெட் பிராண்டில் 99.99 சதவீதத்தை நாங்கள் விளையாடியுள்ளோம்.
1983 உலகக் கோப்பை வெற்றி, ஒரு குழந்தை முதல்முறையாக சில அடிகள் நடப்பதைப் பார்ப்பது போல் மகிழ்ச்சியாக இருந்தது, 2011 ஆம் ஆண்டு வெற்றி இனிமையாக இருந்தது, ஒரு தேசம் தனது தலைசிறந்த கிரிக்கெட் மகன் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பை வெற்றியை அனுபவிக்க முடியும் என்ற நிம்மதி-நிறைந்த மகிழ்ச்சியில் திளைக்க செய்தது. அதேபோல் 2023 கிரிக்கெட்டை களத்திலும் வெளியிலும் இந்தியா முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நேரம் இது டிராவிட்க்கான மரியாதை என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.