ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்... இப்ப இப்படி ஆக்கிட்டீங்களே: கௌதம் மேனனுக்காக களமிறங்கிய நெட்டிசன்கள்!

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ட்ஸ் லெவல் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் கௌதம்மேனன் நடித்துள்ளார்.

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ட்ஸ் லெவல் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் கௌதம்மேனன் நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Gautham Menon

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ள கௌதம்மேனன், சந்தானம் நாயகனாக நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஒரு காட்சி தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

கடந்த 2001-ம் ஆண்டு மாதவன் அப்பாஸ் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம்மேனன். தொடர்ந்து சூர்யாவுடன் காக்க காக்க, வாரணம் ஆயிரம், கமல்ஹாசனுடன், வேட்டையாடு விளையாடு, சிம்புவுடன் விண்ணைத்தான்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, அஜித்துடன் என்னை அறிந்தால், உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

தான் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் நடித்து வந்த கௌதம்மேனன், விக்ரம் நடிப்பில், இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு சிக்கல் காரணமாக முழுநேர நடிகராக களமிறங்கினார். 2018-ம் ஆண்டு வெளியான கோலி சோடா 2 படத்தின் நடித்திருந்த கௌதம் மேனன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ருத்ரதாண்டவம், பத்து தல, லியோ, விடுதலை, ட்ராகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜயின் கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisment
Advertisements

இதனிடையே சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள டிடி நெக்ட்ஸ் லெவல் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதல் தற்போது வெளியாகியுள்ள ஒரு காட்சியில், யாஷிகாவுடன் ரொமான்டிக்காக பேசிக்கொண்டிருக்கும் கௌதம்மேனன், காக்க காக்க படத்தில் வரும் உயிரின் உயிரே பாடலுக்கு நடனம் ஆடுவது போன்று இருவரும் கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கின்றனர். இதை பார்த்து சந்தானம், மொட்டை ராஜேந்திரன் இருவரும் பின்தொடர்ந்து செல்கின்றனர்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும், தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர், பாவம்யா அந்த ஆளு மணிக்காக இல்ல வேற எதுக்காக இந்த ஆளு இப்படி நடிக்கிறார் என்று தெரியலை என கூறியுள்ளார். மேலும் ஜி.வி.எம். எவ்வளவு பெரிய டைரக்டர் என்றும், நீ ஒரு லெஜண்ட்யா இப்படியெல்லாம் பண்ணாத என்றும், ஒரு காலத்தில் எப்படி இருந்த மனுஷன் என்றும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த படத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ள கௌதம்மேனன், நான் கால்ஷீட் இல்லாதபோது உங்களின் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்தேன். அதனால் நீங்கள் இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று சந்தானம் கேட்டுக்கொண்டதால் அவருக்காக நடித்தேன். 3 நாட்கள் தான். ஆனால் உங்கள் படத்தில் ஹீரோக்கள் செய்தது போல் நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ரொம்ப சீரியஸாக போய்க்கொண்டிருக்கும் என் கேரக்டருக்கு பின்னால் ஏகப்பட்ட காமெடிகள் இருக்கிறது,

என் படத்தில் ஏற்கனவே வந்த காட்சிகளை நானே இந்த படத்தில் செய்திருக்கிறேன். பல படங்களில் காட்சிகள் வருகிறது. அதேபோல் என் படத்தில் வரும் காட்சிகளுக்காக என்னிடம் கேட்டு விட்டு எடுத்தார்கள். நானே நடித்திருக்கிறேன் என்று கௌதம் மேனன் கூறியுள்ளார். நீதானே என் பொன் வசந்தம் படத்தில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு த்ரிஷா நடித்த காட்சிகளில் சந்தானம் வித்யூலேகா ஆகியோர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Gautham Menon

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: